Author: Six Side Media

  • சீரற்ற காலநிலை! அடுத்த 24 மணி நேரத்திற்கு  சிவப்பு எச்சரிக்கை

    சீரற்ற காலநிலை! அடுத்த 24 மணி நேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

    புத்தளம் (Puttalam) முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு சுமார் 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசும் எனவும், கடற்பரப்புகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக…

  • மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை: அமைச்சர் ஹன்சக விஜேமுனி உறுதி

    மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை: அமைச்சர் ஹன்சக விஜேமுனி உறுதி

    அரச மருத்துவமனைகளில் பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று, பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி, பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். நாட்டில் தற்போது மருந்துப் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கான அத்தியாவசிய மருந்துகள் இடையூறு இல்லாமல் கிடைக்கின்றன என்றும், அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், சில மருந்துகள் தொடர்ச்சியான விநியோகச் சங்கிலி சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் ஒப்புக்…

  • யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

    யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

    யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று(14) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில்,  மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை யாழ்ப்பாணம் பொலிஸ்…

  • மின்கட்டண அதிகரிப்பு நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்- எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    மின்கட்டண அதிகரிப்பு நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்- எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிப்பது மக்கள் வழங்கிய ஆணையை காட்டிக் கொடுக்கும் செயலாகும். இது மக்கள் ஆணைக்கு இழைக்கப்படும் துரோகமுமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும்   குறிப்பிட்டுள்ளதாவது   : மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையும், அரசாங்கமும் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.…

  • அமெரிக்க-கனடா எல்லையில் வெளிநாட்டுப் பிரஜைகள் இனி வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது: குடிவரவு அமைச்சர்

    அமெரிக்க-கனடா எல்லையில் வெளிநாட்டுப் பிரஜைகள் இனி வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது என கனடா குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் அறிவித்துள்ளார். சர்வதேச மாணவர்களும் எல்லையில் முதுகலை வேலை அனுமதிக்கு (PGWP) விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். இந்த புதிய நடவடிக்கை விரைவில் அமுலுக்கு வரும் என அமைச்சர் தெளிவுபடுத்தினார். அதற்கு பதிலாக, வெளிநாட்டினரின் விண்ணப்ப செயலாக்கத்தை விரைவுபடுத்துவதற்கு மேலும் ஒருங்கிணைந்த மற்றும் சீர்திருத்த கொள்கைகள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்

  • கனடாவில் உச்சம் தொட்ட வீட்டு வாடகை: அவதியுறும் புலம்பெயர் தமிழர்கள்

    கனடாவில் உச்சம் தொட்ட வீட்டு வாடகை: அவதியுறும் புலம்பெயர் தமிழர்கள்

    கனடாவில் வீட்டு வாடகைத் தொகை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே மாதத்தில் கனடாவில் சராசரி வீட்டு வாடகைத் தொகை இலங்கை ரூபாப்படி 630,000 ஐ (2,200 அமெரிக்க டொலர்கள்) தாண்டியுள்ளது. Rentals.ca மற்றும் Urbanation நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீட்டு வாடகைத் தொகை 9.3 வீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வான்கூவர் மற்றும் டொராண்டோவில் 2023 ஆண்டு மே மாதம் முதல் வீட்டு வாடகைத்…

  • அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வோம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி ஸ்கார்புரோவில் பரிமாறப்படும் இடங்களின் விவரங்கள்

    அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வோம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி ஸ்கார்புரோவில் பரிமாறப்படும் இடங்களின் விவரங்கள்

    நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி முள்ளிவாய்கால் கஞ்சி ஸ்காபுரோவில் நியூஸ் ஸ்பைசி லாண்ட், இரா சுப்ப மாக்கற், நியூ ஓசன்,ரூச் பேக்கறி மற்றும்பிறம்ரணில் தினுசா கேற்றறிங், மாயா கேற்றறிங், மற்றும் மாக்கம் சவுத்தேசியன் ஆகிய இடங்களில் மே18 வரை இடம் பெறுகின்றன. அனைவரும் கலந்து நினைவு வணக்கம் மற்றும் கஞ்சியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுமாறு வேண்டுகின்றோம்.

  • விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் தடை நீடிப்பு நேர்மையற்றது: இயக்குனர் கௌதமன் குற்றச்சாட்டு

    விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் தடை நீடிப்பு நேர்மையற்றது: இயக்குனர் கௌதமன் குற்றச்சாட்டு

    விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு மூலம் சீன அரசுக்கு இந்திய அரசு உதவி செய்துள்ளதாக இயக்குநர் கௌதமன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விடுதலைப்புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தடை நீடிப்பு நேர்மையற்ற மற்றும் அறமற்ற ஒரு செயல் என இயக்குநர் கௌதமன் கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப்புலிகள் வன்முறை இயக்கம் அல்ல என ஜரோப்பிய யூனியன் சுட்டிக்காட்டி, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள நிலையில், இந்திய அரசாங்கம் மேலும் 5 வருடங்களுக்கு தடையை நீடித்துள்ளதன் மூலம்…

  • விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு: வைக்கோ கடும் கண்டனம்

    விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு: வைக்கோ கடும் கண்டனம்

    தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய மத்திய அரசு தடைசெய்துள்ள நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இது அநீதியான செயல் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ‘இலங்கையில் நடைபெற்றுவந்த போர், 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை.…

  • மாமனிதர் ஈழவேந்தன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு (LIVE)

    மாமனிதர் ஈழவேந்தன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு (LIVE)

    மாமனிதர் ஈழவேந்தன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் கீழ் உள்ள இணைப்புனூடக நேரலையில் பார்வையிடலாம்.