Author: Six Side Media
-
மாந்திரீக தடை சட்டத்தை அமல்படுத்த ஐகோர்ட்டில் கேரள அரசு மறுப்பு
கொச்சி : ‘கேரளாவில், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற நடவடிக்கைகளை தடைசெய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த போவதில்லை’ என, உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற நடவடிக்கைகளால் தொடர் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுக்கும் நோக்கில், ‘மாந்திரீகம், பில்லி, சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்பு மசோதா’வை, சட்ட சீர்திருத்த கமிஷன், 2022ல் பரிந்துரைத்தது. இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது என கேரள அரசு பின்வாங்கியது. இது தொடர்பாக, யுக்திவாடி…
-
இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை
இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின் காரணமாக ஈரானில் சுமார் 610 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் சுகாதார அமைச்சு இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 13ம் திகதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் 49 பெண்களும், 13 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல்களில் 4746 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் இதில் 185 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் தாக்குதல்களில் 5 சுகாதாரப்…
-
யாழில் திடீரென சுழற்றி அடித்த காற்று!
யாழ்ப்பாணத்தில் காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு பல பிரதேசங்களில் சற்று முன்னர் பாரிய சுழல் காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது திடீரென சுழற்றி அடித்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. தற்போது இடி மழையுடன் பலத்த காற்று ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது இதேவேளை பாரிய காற்றினால் மின்சாரம் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மரங்கள் முறிந்து விழுந்து சேதம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மின்சார சபையை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
யாழில் நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி! ; சோகத்துடன் வெளியேறிய பாடகர்கள்!
யாழ்ப்பாணத்தில் இன்று திடீரென பாரிய சுழல் காற்றுடன் மழை பெய்தததால் சரிகமப இசைக்குழுவினர் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனத்தின் சரிகமப இசைக்குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். ஜீ தமிழ் தொலைக்காட்சி இடம்பெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியானது சீனியர், யூனியர் என்ற ரீதியில் தொடர்சியாக இடம்பெற்று உலகளவில் அனைவரையும் கவர்ந்து வருகின்றது. இந்த நிலையில், பிரம்மாண்ட இசைநிகழ்ச்சியொன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிலையிலேயே சரிகமப இசைக்குழுவினர் பலாலி விமான…
-
உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஈரானின் அதிரடி முடிவு!
உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றமும் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக ஈரான் –…
-
வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்- பிரபு எம்பி
கடந்த காலங்களில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென்று பல விடயங்களை எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது நேற்றைய (21)தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…
-
மத்திய கிழக்கில் ஏற்படவுள்ள பேரழிவு- இஸ்ரேலின் அதிரடி திட்டம் குறித்து எச்சரிக்கை
ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான நேரடித் தாக்குதல், “மிக அதிக கதிரியக்க வெளியீட்டை” ஏற்படுத்தும் என்றும், இது ஆலையிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்குள் உள்ள மக்களைப் பாதிக்கும் என்றும் அணுசக்திக்கான சர்வதேச அமைப்பின் இயக்குனர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், புஷேர், ஈரானில் உள்ள அணுசக்தி தளம், அங்கு தாக்குதலின் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும். ஒரு…
-
நாமலை பழிதீர்க்க காத்திருந்தேன் ; நாடாளுமன்றில் உண்மையை உடைத்த அர்ச்சுனா
ஒரு காலத்தில் தனது அப்பாவைக் கொலை செய்த நாமல் ராஜபக்சவை கொலை செய்ய நினைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் உரையாற்றுகையில், “எனது அப்பாவைக் கொலை செய்த நாமல் ராஜபக்சவை நான் கொலை செய்ய வேண்டும் என ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று போய் அழகாகக் கதைத்தேன். அந்தளவு பகை எனது இதயத்திலிருந்தது. நான் சிறுவயதாக…
-
500 கோடி ரூபா நட்டஈடு : இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவு
கொச்சி டஸ்கர்ஸ் கேரளாவின் ஐபிஎல் உரிமையை நிறுத்தியதன் காரணமாக ஏற்பட்ட நிதியிழப்புக்கு நட்டஈட்டை வழங்கவேண்டும் என்று இந்திய கிரிக்கட்கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொச்சி கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரெண்டெஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த கணிசமான இழப்பீட்டை வழங்குமாறு மும்பை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை குறித்த இரண்டு நிறுவனங்களுக்கும் 386 கோடி ரூபாய் மற்றும் 153 கோடி ரூபாய்களை செலுத்த வேண்டும். கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி 2011 இல் இந்தியன் பிரீமியர் லீக்கின்…
-
கழிவுப் பொருட்களுக்கு தீ வை வைப்பு :வீதியால் செல்லும் மக்கள் அவதி
மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் கழிவுப் பொருட்களை சேகரித்து வருகின்றனர். குறித்த கழிவு சேகரிக்கும் பகுதிக்கு தொடர்ச்சியாக தீ வைத்து வருவதால் வீதியால் செல்லும் பயணிகளும் அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில் இன்றையதினம் குப்பை மேட்டுக்கு தீ வைத்ததன் மூலம் வெளியான புகை வீதியெங்தும் பரவியதால் வீதியால் செல்லும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். மாநகர சபையின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து பல தடவைகள் செய்திகள் வெளியாகிய போதும் அவர்கள்…