Category: முக்கிய செய்தி
-
வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்- பிரபு எம்பி
கடந்த காலங்களில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென்று பல விடயங்களை எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது நேற்றைய (21)தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…
-
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்க அரசாங்கம் தீர்மானம்
பாராளுமன்ற ஓய்வூதிய சட்டங்களை இரத்து செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதி உரித்துக்கள் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டங்களை இரத்துச் செய்வதற்கு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள ‘வளமான நாடு – அழகான வாழ்வு’ கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிமாருக்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைளை இரத்துச் செய்வதற்காகவும்,…
-
இந்திய தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது குறித்ததான கலந்துரையாடல்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயனுக்கும் இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது நேற்று (16) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த ஆண்டு தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏது நிலைகள்…
-
ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை!
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 220 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளும் தொடர்ந்தும் ஐந்தாவது நாளாக இன்றும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், ஈரானிய இராணுவ தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். மேலும், ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்களுக்கு இஸ்ரேல் ஏற்படுத்திய சேதங்களைக் காட்டும் வகையிலான…
-
இஸ்ரேலுக்கு செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமையைப் பொறுத்து மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். மத்திய கிழக்குபிராந்தியத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்தந்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் தேவையான நேரடி தலையீட்டை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களின் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அந்தந்த நாடுகளின்…
-
மீண்டும் இஸ்ரேலை நோக்கி ஈரானிய ஏவுகணைகள்!
இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் குறித்த தாக்குதலைத் தடுக்க இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அறிவிப்பு வரும் வரை குடிமக்கள் தங்குமிடங்களுக்குள் நுழைந்து அங்கேயே இருக்குமாறும் இஸ்ரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு முன்னர், ஈரானிய அரச ஊடகம் மீது இஸ்ரேல் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. ஈரான் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ஹைஃபா பகுதியிலும் வடக்கு இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலிப்பதாக…
-
யாழில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!
யாழ். மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகள் மீண்டும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களதும், தனியாரதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. இதேவேளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண…
-
சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் முன்னெடுப்பு!
தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைகழக வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்ற நிகழ்வில், பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்தி போராடினார். அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் கடந்த 1974ஆம் ஆண்டு ஜீன் மாதம்…
-
உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலை: அகற்றுமாறு கோரிக்கை..!
தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் ஆக்கிரமித்தலும் அண்மைக்காலமாக தொடர்கின்றது. தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலுடன் தொடரும் ஆக்கிரமிப்புகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீவன் தெரிவித்துள்ளார். அம்பாறை உகந்தை மலையிலுள்ள ஆலயம் அதனுடன் இணைந்த கடற்கரையிலுள்ள மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர் பாரம்பரிய…
-
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேருக்கு தடையுத்தரவு
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேருக்கு தடையுத்தரவு மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய சுதந்திர தினமான நாளை (4) ஆர்ப்பாட்டங்களை, சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழுபேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இதற்கான தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. இலங்கை குடியரசின் தேசிய தினம் 04-02-2025 அன்று கொண்டாடப்பட வேண்டியது என இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பில் 08ஆவது சரத்தில் கூறப்பட்டுள்ளது.…