Category: பிரதான செய்தி
-
இலங்கையில் வீதி விபத்துகளில் 1,417 பேர் உயிரிழப்பு
இந்த வருடத்தில் இதுவரை 1,417 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வருடாந்தம் சுமார் 1000 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் உயிரிழப்பதாக போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார். இந்திக்க ஹப்புகொட மேலும் கருத்து தெரிவிக்கையில், ”3,000 க்கும் மேற்பட்ட வீதி விபத்துகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் விபத்துகளில் மூன்றில் ஒன்று மோட்டார் சைக்கிள் விபத்து. 2023 இல் வீதி விபத்துகள் குறைந்துள்ளன. 2024 ஜனவரி…
-
மகிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமர் நாமல்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP), தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், இது தொடர்பாக கட்சியின் உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான…
-
இலங்கையில் முடங்கிய விமான சேவைகள் – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஒன்லைன் முன்பதிவு சேவைகள் முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இணைய சேவைகள் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் சீரமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களின் உலகளாவிய செயலிழப்பு காரணமாக விமானத்தின் ஒன்லைன் முன்பதிவு சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. விமான சேவைகள் உலகளாவிய தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 0094 19733 1979…
-
அரசியல் களத்தை தீவிரமாக்கும் 22ஆம் திருத்த சட்டமூலம்..!
நாடாளுமன்றத்தில், எதிர்வரும் வாரங்களில் 22ஆம் திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படமாட்டாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு பின்னர், 22ஆம் திருத்த சட்டமூலம் முன்வைக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் 22ம் திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவு கிடைக்காவிட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றை கலைப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட…
-
தேரரை விடுதலை செய்வதயின் பல இலட்சம் முஸ்லிம் சமூகத்தினரின் கையில்! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
ஞானசார தேரருக்கு மன்னிப்புக் கொடுக்கும் விவகாரமானது நாட்டின் சட்டத்தோடும் உயர் நீதிமன்றத்தோடும் நேரடியாக தொடர்பட்டிருக்கும் நிலையில் முஸ்லிம் சமூகத்திடம் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகிறது எனவே நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களிடம் கருத்தைப் பெறாமல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோ, முஸ்லிம் சிவில் அமைப்புக்களோ, அரசியல் பிரமுகர்களோ இது தொடர்பில் எந்தவித நிலைப்பாடுகளையும் எடுக்க முடியாது என்று அறியப்படுகிறது இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்டத்துறை வல்லுநர்கள், அரசியல்…
-
இலங்கையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
அம்பலாங்கொட, கந்த மாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அணியின் தலைவராக இருந்த தம்மிக்க நிரோஷன என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவர் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் சுரங்க மானவடுவின் உதவியாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்மிக்க நிரோஷன வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது…
-
அனுராதபுரத்தில் நிலநடுக்கம்!
அனுராதபுரம் மற்றும் கந்தளாய்க்கு இடைப்பட்ட பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
-
கிளப் வசந்தவின் மனைவியின் நிலைமை கவலைக்கிடம் – மலர் வலையம் அனுப்பிய மர்ம நபர்கள் – பொலிஸார் குவிப்பு
அத்துருகிரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்த சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்தாவின் மனைவி நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென களுபோவில வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கிளப் வசந்தவின் மனைவிக்கு அடையாளம் தெரியாத நபர் மலர் வலையம் ஒன்றை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலையை சுற்றி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டின் போது எட்டு தோட்டாக்கள் அவரது உடலில் பாய்ந்துள்ளதாகவும், அவை அறுவை சிகிச்சை மூலம்…
-
சம்பளம், வீடு, காணி எதுவும் இல்லை மனோ
சம்பளம் 1,700 என்றார்கள் அது இன்னமும் இழுபறி. ரூ.1,000 சம்பளமே முழுமையாக கிடைப்பது இல்லை. சில இடங்களில் அரை பேர் போட்டு ரூ. 500 தரப்படுகிறது. அப்புறம், இவர்களின் ஏகப்பட்ட முறை கேடுகள், தில்லு முல்லுகள், மோசடிகள் காரணமாக இந்திய வீட்டு திட்டம் தாமதம் ஆகி விட்டது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்கிய 10,000 வீட்டு திட்ட உறுதி மொழியை நாம் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றி வைப்போம். அப்புறம், 10 பேர்ச்…
-
ஜனாதிபதி ரணிலுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவிற்கும் இடையே முக்கிய சந்திப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த சந்திப்பானது நாளைய தினம்(14.07.2024) இடம்பெறவுள்ளது. வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா வடக்கு சுகாதாரத் துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்த நிலையில், அது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அத்துடன், இன்றையதினம்(13) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை வைத்தியர் அர்ச்சுனா சந்தித்து பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர் மேலும்,…