Category: பிரதான செய்தி

  • பாடசாலை மாணவிகள் தொடர்பில் பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை!

    நாட்டிலுள்ள பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சின் இந்த கலந்துரையாடல், நேற்று (22) கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கல்வி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில், சுகாதாரத் துவாய் உற்பத்திக்காக இலங்கையில் தர நிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற பிரதான 4 கம்பனிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். இதேவேளை, கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் போஷாக்கு பிரிவின்…

  • கட்சியை மீள கட்டியெழுப்புவேன்: ஜீவன் உறுதி

    அரை மனதுடன் நூறு அங்கத்தவர்கள் இருப்பதைவிட, முழு மனதுடன் பத்து அங்கத்தவர்கள் என்னுடன் இருந்தால் நான் கட்சியை மீள உறுதியாக கட்டியெழுப்புவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்ததைப்போல் எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ள இருக்கின்றோம். இம்மாற்றங்களினூடாகவே தொடர்ந்து செயற்பட தயார்நிலையில் இருக்கின்றோம். இதுவே காலத்தின் தேவைப்பாடும் ஆகும். இ.தொ.காவின் பொதுச்செயலாளர் என்ற பதவி…

  • யாழில் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் கோடி கணக்கில் திருட்டு நகைகள் பொலீசாரால் மீட்ப்பு

    யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன…

  • கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் மர்மமான முறையில் கொலை

    கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த 70 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று பிற்பகல் கிருலப்பனை, காலிங்க மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதியில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் இருந்து சுமார் 8 பவுண் தங்கம் திருடப்பட்டுள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட பெண் கொலை செய்யப்பட்ட பெண் தனது கணவர், மகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வந்துள்ளார்.…

  • பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

    அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் அடுத்த மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்று…

  • யாழ். ஊடக அமையத்துக்கு சீனத் தூதுவர் குழு விஜயம்

    இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் யாழ். ஊடக அமையத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். குறித்த விஜயமானது நேற்று (19) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். ஊடக அமையத்தின் போசகர் இ.தயாபரன், தலைவர் கு.செல்வக்குமார் உள்ளிட்டோர் தூதுவரை வரவேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வில், யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம்

    அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளது. ஜனாதிபதி முன்னிலையில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு குறித்த பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதுடன், அமைச்சரவை அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாணமும் இடம்பெறவுள்ளது. இதேவேளை, 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் (21) காலை. புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 11.30க்கு வழங்குவார் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்…

  • ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பேர் கைது

    மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று (16) இரவு ரோந்து பணியின் போது. கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் வசிக்கும் சந்தேகநபர்கள் இருவரும் வடகிழக்கு…

  • தேசிய பட்டியலுக்கான அளவுகோல்களை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு

    தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதற்கான அளவுகோல்களை, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் அல்லது 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படாத வேட்பாளர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட முடியும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் தேசிய பட்டியல் மூலம் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

  • தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் கருத்து

    இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சியின் அரசியல் குழுவே இறுதி முடிவு எடுக்கும் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (16.11.2024) சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு முடிவும் கட்சியால் எடுக்கப்படவில்லலை. இதனால் கட்சியின் அரசியல் குழு கூடி ஒரு முடிவு எடுக்கும்…