Category: உலக செய்திகள்
-
இந்திய அணிக்கு மிகப்பெரிய பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ
ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் உலக கிண்ண தொடரில் இந்தியாவுக்கு இலங்கை மதிப்பில் 45.6 மில்லியன் ரூபாவை பரிசாக வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது. பார்படொஸ், ப்றிஜ்டவுனில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மிகவும் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்தியா 7 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டி 17 வருடங்களின் பின்னர் மீண்டும் உலக செம்பியனானது. இதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றைத் தொடர்ந்து இரண்டு தடவைகள் ரி20…
-
பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது ஹிஸ்புல்லா அமைப்பு
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிலிருந்து அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் நீக்கியுள்ளது. ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதால் அவா்களுடன் தகவல் தொடா்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாத நிலை உள்ளதாக, அரபு நாடுகளின் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஹோஸம் ஸாகி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினரை நீக்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்னதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹிஸ்புல்லா படையை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சோ்த்திருந்ததாகவும், இது…
-
இஸ்ரேல் பிடியில் இருந்து 7 மாதங்களின் பின் விடுதலைசெய்யப்பட்ட அல்-ஷிஃபா மருத்துவமனை தலைவர்!
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் ஏழு மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகளின் தற்போதைய நிலை முன்னெப்போதையும் விட மோசமாக இருப்பதாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரது கட்டுப்பாட்டில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை ஹமாஸ் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக…
-
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலால் வெடித்த வன்முறை ; அச்சத்தில் மக்கள்!
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினர் தலைநகர் பரிசில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், வர்த்தகநிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. தீவிர இடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வர்த்தகநிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட மக்ரோனின் கட்சி பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை…
-
திருமணம், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் பெண் தற்கொலைப்படை நடத்திய தாக்குதல்! 18 பேர் பலி
நைஜீரிய நாட்டில் திருமண நிகழ்ச்சி, இறுதிச்சடங்கு நிகழ்ச்சி, மருத்துவமனையில் பெண் தற்கொலைப்படையாளர்கள் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. திருமணம், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் பெண் தற்கொலைப்படை நடத்திய தாக்குதல்! 18 பேர் பலி ISIS Terrorist Nigeria Crime நைஜீரிய நாட்டில் திருமண நிகழ்ச்சி, இறுதிச்சடங்கு நிகழ்ச்சி, மருத்துவமனையில் பெண் தற்கொலைப்படையாளர்கள் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.…
-
ஆங்கில புள்ளியியல் நிபுணரும், டக்வொர்த் லுவிஸ் (DLS) முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான ஃபிராங்க் டக்வொர்த் தனது 84 வது வயதில் காலமானார்.
ஆங்கில புள்ளியியல் நிபுணரும், டக்வொர்த் லுவிஸ் (DLS) முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான ஃபிராங்க் டக்வொர்த் தனது 84 வது வயதில் காலமானார். ஃபிராங்க் டக்வொர்த் ஜூன் 21 அன்று உடல்நிலை மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஃப்ராங்க் டக்வொர்த் மற்றும் சக புள்ளியியல் நிபுணரான டோனி லுவிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட டக்வொர்த் லுவிஸ் முறை, மழையால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகளைத் தீர்மானிக்க அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறை 1997 இல் சர்வதேச…
-
அமெரிக்காவில் 4 பேர் படுகொலை!
அமெரிக்காவில் ராக்போர்ட், இல்லினாய்ஸ் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு நான்குபேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையிலும் ஏனைய நான்குபேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
-
இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா !
ஐநாவில் போர் நிறுத்த தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் அமெரிக்கா வாக்களிக்காமல் போனதை தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேலை கைவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பலவும் வலியுறுத்திவந்த நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருந்த போர் நிறுத்தத் தீர்மானம் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டது. அதில், அமெரிக்காவை தவிர யு.என்.எஸ்.சி-ல் மொத்தமுள்ள 15 நாடுகளில் 12 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த வாக்கெடுப்பில், அமெரிக்கா தனது கொள்கையை நேற்று நடந்த ஐநா வாக்கெடுப்பின்போது கைவிட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் ; ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்
காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்துடன் ஹமாஸ் தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐ.நா.பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் எக்ஸ் பதிவில் , தீர்மானத்தை உடனடியாக அமல்படுத்தத் தவறினால் மன்னிக்க முடியாத குற்றமாகும் என தெரிவித்துள்ளார்.
-
இளவரசி கேட் மிடில்டனுக்கு கீமோதெரபி சிகிச்சை
பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. வேல்ஸ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு வயது 42. இவர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேட் மிடில்டனை காணவில்லை என வதந்திகள் பரவின. இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் கென்சிங்டன் அரண்மனை தரப்பில், இலண்டன் மருத்துவமனையில் கேட் மிடில்டன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு…