Author: Yalarasan
-
கனடிய தமிழர் பேரவை (CTC) கெளரவ ஜனாதிபதி அவர்களுக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு கனடிய தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள். கனடிய தமிழர் பேரவை (CTC) கெளரவ ஜனாதிபதி அவர்களுக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களின் மகத்தான வரலாற்று வெற்றிக்கு இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) கனடிய தமிழர் பேரவை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர். இந்த கடிதத்தில், CTC தமிழ் கனடியர்களின்…
-
மாவட்ட ரீதியாக விருப்பு வாக்குகளின் விபரங்கள்
கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தியில் (NPP) சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியும் கொழும்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை வென்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி – 14 1. ஹரினி அமரசூரிய -655,289 2. சதுரங்க அபேசிங்க -127,166 3. சுனில் வட்டகல -125,700 4. லக்ஸ்மன்…
-
மகிந்தவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் பிரதமர் ஹரிணி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சாதனையை முறியடித்துள்ளார். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, 655,289 என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். வரலாற்றில் இடம்பிடித்த வாக்கு எண்ணிக்கை இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக பிரதமர் ஹரிணி பெற்ற வாக்குகள் இடம்பிடித்துள்ளன இதற்கு…
-
முள்ளிவாய்க்கால் நினைவு தூபில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய புதிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்
முள்ளிவாய்க்கால் நினைவு தூபில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய புதிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்றைய தினம் (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம்(15) முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார் நேற்றைய தினம் (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தாெகுதியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
-
மன்னாரில் வாக்காளர்களுக்கு என வழங்க கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் பொலிஸாரால் மீட்பு-3 நபர்கள் கைது-அடம்பன் பொலிஸார் நடவடிக்கை.
மன்னாரில் வாக்காளர்களுக்கு என வழங்க கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் பொலிஸாரால் மீட்பு-3 நபர்கள் கைது-அடம்பன் பொலிஸார் நடவடிக்கை. மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால் வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் இன்று புதன்கிழமை(13) மாலை மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார்-யாழ் பிரதான வீதியில்…
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி மாவட்ட அரசாங்க அதிபர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி மாவட்ட அரசாங்க அதிபர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் நாளையதினம் (14) இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் தாெடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அனைத்து தேர்தல் பணிகளும் பூர்த்தியாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில்…
-
யாழில் 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி இன்று திறந்து வைப்பு
யாழ். வசாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட வீதியானது நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (01.11.2024) நடைபெறவுள்ளது. இராணுவ முகாமுக்கு அருகாமையில் உள்ள குறித்த வீதியானது நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின்போது குறித்த வீதியை நிறைந்து வைத்து, மக்களின் போக்குவரத்துக்கு வழி சமைக்குமாறு கோரிக்கையை…
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அதிரடியாக கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுகேகொட, மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த கார் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மகிந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடிகள் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
-
இலங்கைக்கு வருவதற்கு விமான நிலையத்தில் காத்திருந்த பெண் மரணம்
நாட்டுக்கு திரும்புவதற்காக குவைத் விமான நிலையத்தில் காத்திருந்த இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான நிரோஷா தமயந்தி என்ற 48 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக கடந்த 9ஆம் திகதி குவைத் சென்றிருந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். உடல்நல குறைவால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தமது தாயார் நோயின்றி மகிழ்ச்சியாக…
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று (30) காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, காணாமல் போன தமது பிள்ளைகளின் படங்களையும், வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் ஏந்தியவாறு பிள்ளைகளுக்கு நீதி வேண்டி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது