Author: yalarasan canada

  • அம்மாவின் ஆசையை நிறைவேற்ற பெலாரஸுக்குச் சென்ற தம்பிக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை : அண்ணனின் உருக்கமான வேண்டுகோள் !

    கடந்த 2025.04.06 ஆம் திகதி எமக்கு ஓர் திடுக்கிடும் தகவல்! அவர் அங்கு தவறான முடிவெடுத்து உயிரிழந்தாக எனக்கு தகவல் கிடைத்திருந்தது. எனது தம்பி வெளிநாடு செல்ல வேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிறைவேற்றி, அம்மாவின் ஆத்மா ஈடேற வேண்டும் என்பதற்காகவும், எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் எனது தம்பி தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார். பெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற எனது தம்பியான விநாயகமூர்த்தி பகிரதனுக்கு என்ன நடந்தது என்பது…

  • போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடையே மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திய புடின்: அதிர்ச்சியான அமெரிக்கா

    போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடையே ரஷ்யா, உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து, அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு,”அவர் (புடின்) முழு உக்ரைனையும் விரும்பினால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று எச்சரித்து உள்ளார். ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில் உள்ள மோரிஸ்டவுன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “புடினுடன் நான் மகிழ்ச்சியாக இல்லை” என்று கூறி புடினை விமர்சித்தார். “அவர் நிறைய பேரைக் கொல்கிறார். புடினுக்கு என்ன ஆயிற்று…

  • “கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி: தமிழ் டயஸ்பொறாவின் வரலாற்றுச் சாதனை”

    டொராண்டோ, மே 2025 – கனடாவின் Toronto நகர சபையில், தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைப்பதற்கான முக்கியமான தீர்மானம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. “கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி: தமிழ் டயஸ்பொறாவின் வரலாற்றுச் சாதனை” டொராண்டோ, மே 2025 – கனடாவின் Toronto நகர சபையில், தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைப்பதற்கான முக்கியமான தீர்மானம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கனடிய அரசியல் வரலாற்றிலும், சர்வதேச தமிழர் உரிமைப் போராட்ட வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயமாக…

  • ஐரோப்பாவின் பாதுகாப்பு பரிதாபம், ரஷ்யாவின் தாக்குதல்கள்: உக்ரைனில் தீவிரமடையும் பதற்றம்!

    ஐரோப்பா தனது பாதுகாப்பு பேச்சை தீவிரமான நடவடிக்கைகளுடன் விரைவாக இணைக்காவிட்டால், அதன் வாக்குறுதிகளுக்கும் உக்ரைனின் போர்க்கள நிலைமைக்கும் இடையிலான இடைவெளி மேலும் அகலும். ஐரோப்பாவின் பாதுகாப்பு பரிதாபம் மற்றும் ரஷ்யாவின் தாக்குதல்கள்: உக்ரைனில் தீவிரமடையும் பதற்றம் புதிய மோதல் கட்டம். உக்ரைனில் தொடரும் போர், இப்போது ஆபத்தான மோதல் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. ரஷ்யாவின் சமீபத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் இந்தப் போர் தொடங்கியதிலிருந்து மிகக் கொடூரமானவை எனக் கூறப்படுகிறது—கீவ் நகரில் 12 பேரைக் கொன்றது மற்றும்…

  • அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

    அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

    வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்தல் மற்றும் இலங்கைக்கு நன்மை பயக்கும் பிரதிபலன்களை பெற்றுக்கொள்ளல் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில்,  வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் இலங்கை தூதுக்குழு பங்கேற்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இதுவாகும். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் மற்றும் இலங்கையின் தொடர்புடைய அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற பல…

  • உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலை; சர்ச்சையை கிளப்பிய விவகாரம்!

    உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலை; சர்ச்சையை கிளப்பிய விவகாரம்!

    அம்பாறை மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய கடற்கரை சூழலில் உள்ள குன்றில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.  வரலாற்றுப் பிரசித்தி பெற்ற  உகந்தை மலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள குன்றிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு பௌத்த கொடியை பறக்க விடப்பட்டுள்ளமையும் கடுமையான எதிர்ப்பலையை ஏற்படுத்தி உள்ளது. உகந்தைமலையில் நாங்கள் முருகன் சிலையொன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில்…

  • இலங்கை வரும் முக்கிய நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு!

    இலங்கை வரும் முக்கிய நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு!

    வர்த்தகம், கடல் துறைமுகங்களுக்கு இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.  இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய பொருளாதார முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையிலேயே உயர்மட்ட பிரதிநிதிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்வதாக தெரிவித்தள்ள சீன தரப்பு,  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர்…

  • அழிந்தவர்கள், அழிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள்! அழித்தவர்கள், படுகொலை செய்தவர்கள் சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள்!

    அழிந்தவர்கள், அழிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள்! அழித்தவர்கள், படுகொலை செய்தவர்கள் சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள்!

    கடந்த 18ஆம் தேதியும் 19 ஆம் தேதியும் இலங்கைத் தீவில் இரண்டு மக்கள் கூட்டங்கள் இருப்பதனை மீண்டும் உணர்த்திய அடுத்தடுத்த நாட்கள். 18 ஆம் திகதி தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள். 19ஆம் திகதி சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள். பதினெட்டாம் திகதியை நோக்கி அந்த வாரம் முழுவதும் தமிழ் மக்கள் ஊர் ஊராக, சந்தி சந்தியாக கஞ்சி காய்ச்சிக் கொடுத்தார்கள். 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் கூடினார்கள்; உருகி அழுதார்கள்.…

  • நியூசிலாந்தின் துணைப் பிரதமர் இலங்கை விஜயம்

    நியூசிலாந்தின் துணைப் பிரதமர் இலங்கை விஜயம்

    நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.  நேற்று (24) இரவு நாட்டுக்கு விஜயம் செய்த அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார்.  2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.  இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நியூசிலாந்தின் ​​வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர்…

  • ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தும் மலையாளத்து வேடன்!

    ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தும் மலையாளத்து வேடன்!

    ஊர் மாறி பிறந்தாலும், பேர் மாறி வளர்ந்தாலும், உள்ளுக்குள் இருக்கும் உணர்வு, அவன் உதிரத்தில் கலந்தது தமிழின துடிப்பு, வேடன் அம்மா, அப்பா, அன்பு, அறிவு, அழகு, அரசியல், அஞ்சாமை…. மலையாளத்து ராப்பர் வேடன் அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார். ஊர் மாறி…