Author: Six Side Media

  • ஈழத்தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய நேரமிது…

    ஈழத்தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய நேரமிது…

    ஈழத்தமிழினம் என்றைக்கும் ஒரு இனமாக அல்லது ஒரு சமூகமாக ஒற்றுமையாக ஒரே கொள்கையுடன் – ஒரே குறிக்கோளுடன் சிந்தித்ததும் கிடையாது ஓரணியாக பயணித்ததும் கிடையாது என்பதற்கு பல வரலாற்று நிகழ்வுகளும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அது இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது. ஈழத்தமிழரின் அகிம்சை போராட்டங்களாக இருக்கட்டும் ஆயுத போராட்டமாக இருக்கட்டும் அனைத்து போராட்டங்களும் நலிவடைந்து போனதற்கு மேற்கூறிய இனத்தின் குணாதிசயங்களே காரணமாக இருந்திருக்கின்றன. ஆனாலும் இத்தனை படிப்பினைகளை கற்றபின்னரும் ஒரு இனம் மீண்டும் மீண்டும் அந்த தவறுகளை செய்துகொண்டிருப்பது…

  • மாற்றுத்தலைமைக்கான அவசியம்

    மாற்றுத்தலைமைக்கான அவசியம்

    ஈழத் தமிழர்களின் மனித உரிமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட விவாதம் ஒன்று அந்நாட்டின் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இடம்பெறிருக்கிறது.மேற்படி விவாதத்தில் ஈழத் தமிழர்கள் தொடர்பிலும் அவர்கள் எதிர்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே, வன்முறை மற்றும் இனப்படுகொலையின் சுழற்சியுடன் துரதிர்ஷ்டவசமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் இன்னும் உயிர் பிழைத்த தமிழர்களைத் துன்புறுத்துவதாக  தெரிவித்தார். மேலும்,இலங்கையில், இனப்படுகொலை தமிழ் சமூகத்தின் மீது பேரழிவு விளைவை ஏற்படுத்தியது.…

  • இந்தியா-சீனாவின் பனிப்போரும் ஈழத்தமிழரின் எதிர்காலமும்

    இந்தியா-சீனாவின் பனிப்போரும் ஈழத்தமிழரின் எதிர்காலமும்

    ஈழத்தமிழர்களை ஸ்ரீலங்காவின் பேரினவாதிகள் மாத்திரமல்ல சர்வதேச நாடுகளும் மிரட்ட ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக சீனா – இந்தியாவின் பனிப்போர் ஈழத்தமிழருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் தற்சமயம் சூழத்தொடங்கியிருக்கிறது. ஈழத்தமிழரின் மிக முக்கிய தளமாக விளங்கும் பாக்கு நீரிணை இந்தியா மற்றும் சீனாவின் பலப்பரீட்சைக் களமாக மாறிவருகிறது என்ற செய்தி அண்மைக்காலமாக அடிபடுகிறது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. அண்மைக்காலமாக சீனா தமிழர் தாயகம் தொடர்பில் அதிக கரிசனையை கொண்டு செயற்படுவதாக தெரிகிறது. கடந்தவாரம் கூட இலங்கைக்கான…

  • முள்ளிவாய்க்கால் முதல் காஸா வரை சர்வதேசத்தின் அலட்சியமும் தோல்வியும்

    முள்ளிவாய்க்கால் முதல் காஸா வரை சர்வதேசத்தின் அலட்சியமும் தோல்வியும்

    காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் மனித பேரவலம் முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசு நடத்திய படுகொலைகளை நினைவுபடுத்துகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய படுகொலையை தமிழர்கள் மட்டுமல்ல உலக மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசிய  இலங்கை இராணுவம்இ பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை  கொன்று தனது கொலை வெறியை தீர்த்துக்கொண்டது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஏற்படுத்திய ரணம் இன்றுவரை ஆறாமல் இருக்கிறது. அதற்கான நீதியும் இன்றுவரை கிடைத்தபாடில்லை.…

  • இளவரசி கேட் மிடில்டனுக்கு கீமோதெரபி சிகிச்சை

    இளவரசி கேட் மிடில்டனுக்கு கீமோதெரபி சிகிச்சை

    பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. வேல்ஸ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு வயது 42. இவர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேட் மிடில்டனை காணவில்லை என வதந்திகள் பரவின. இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் கென்சிங்டன் அரண்மனை தரப்பில், இலண்டன் மருத்துவமனையில் கேட் மிடில்டன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு…

  • இசை கச்சேரியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு – 60 பேர் பலி

    இசை கச்சேரியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு – 60 பேர் பலி

    ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 60 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கின்றனர். நேற்றிரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‘பிக்னிக்’ எனும் ராக் இசைக்குழுவினர் கச்சேரியை நடத்தியிருந்தனர். இந்த கச்சேரியில் அடையாளம் தெரியாத 3-5 நபர்கள் கொண்ட குழு உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதுடன் 130 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று…

  • இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச டீப்பேக் :இழப்பீடு கேட்டு வழக்கு

    இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச டீப்பேக் :இழப்பீடு கேட்டு வழக்கு

    இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இத்தாலி பெண் பிரதமர்…

  • வெப்பநிலை தொடர்பில் ஐநா சிவப்பு எச்சரிக்கை!

    வெப்பநிலை தொடர்பில் ஐநா சிவப்பு எச்சரிக்கை!

    இந்தாண்டில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என ஐநாவின் காலநிலை மாற்ற நிறுவனம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் தற்போது வரை, புவியின் சராசரி வெப்பநிலை 1 புள்ளி 45 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான நிலையை நோக்கி செல்வதாக கவலை தெரிவித்துள்ள இந்நிறுவனம், வெப்பநிலை அதிகரிப்பால், பனிப்பாறைகள் உருகி, கடல்மட்டத்தின் அளவு உயரும் என்றும் எச்சரித்துள்ளது. இதேநிலை நீடிக்கும் பட்சத்தில்…

  • ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன்

    ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன்

    ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.   இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.   ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது மற்றும் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.   இந்த விடயம் தொடர்பில் கட்சி பொதுக் கூட்டமொன்றை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.   ஜனாதிபதி…

  • கொக்குக்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை!

    கொக்குக்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை!

    முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வு பணிக்கான நிதியானது கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் (2024.02.22) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.  …