Tag: #srilankannews
-
பாசையூர் அந்தோனியார் பெருவிழா!
யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்தோனியாரைத் தரித்து ஆசி பெற்றனர்.
-
யாழ்.ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் புலனாய்வாளர்கள் ?
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சந்தேகம் வெளியிட்டார். யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். குறித்த தகவலறிந்து நேற்று அங்கு சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,…
-
யாழில். சட்டவிரோதமாக உணவு பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தவருக்கு தண்டம்!
முறையான அனுமதியின்றி உணவு பொருளை இறக்கு மதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான இறக்குமதி அனுமதியின்றி உணவு உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து , யாழில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு விற்பனை செய்து வந்த நபர் ஒருவருக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்…
-
யாழில். கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர், நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கற்கோவளம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இளைஞனை சில நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் , நேற்றைய தினம் வியாழக்கிழமை கஞ்சாவை விற்பனைக்காக எடுத்து சென்ற போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து…
-
மது போதையினால் பதவி இறக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி!
கனடாவில் மது போதையின் காரணமாக பொலிஸ் அதிகாரி பதவி இறக்கப்பட்டுள்ளார்.கனடாவின் டர்ஹம் பகுதியின் பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறு பதவி இறக்கப்பட்டுள்ளார்.குடி போதையில் வாகன விபத்தினை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி, இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரி வகித்து வந்த பதவி நிலையிலிருந்து ஓராண்டு காலம் தரமிறக்கப்பட்டுள்ளார்.இந்த பொலிஸ் அதிகாரி கடந்த 17 ஆண்டுகளாக சேவையில் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொலிஸ் அதிகாரியின் ஓட்டுனர் உரிம் ஓராண்டுக்கு இடைநிறுத்தப்படுவதுடன் 2500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.போல் ட்விடி என்ற…
-
சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு!
கனடாவில் சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் ஒட்டாவா மற்றும் ரொறன்ரோவில் அதிகளவில் தங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.29 வயதான கெரி பிரின்ஸ் என்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒருநாள் பரோலில் விடுவிக்கப்பட்ட நபர் நிப்தனைகளை மீறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.வீடு உடைப்பு, சொத்து கொள்ளை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆறு அடி உயரமான கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக…
-
யாழில். காணமால் போன கடற்தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மீட்பு!
யாழ்ப்பாணம் – அனலைதீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணமல் போன இருவரும் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளனர். அனலைதீவைச் சேரந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவருமே படகு இயந்திரம் பழுதாகி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் பகுதியில் கரையொதுங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருவரிடம் பொலிஸார் மற்றும் கரையோர காவல் படையினர் விசாரணைகளை மேற்கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அனலைதீவில் இருந்து கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்திருந்தமை…
-
யாழில் 135 கிலோ கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் 135 கிலோ கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் பெருமளவான கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் 135 கிலோ எனவும் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அவற்றினை மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
-
யாழில். பட்டப்பகலில் வீடுடைத்து கொள்ளை – ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் கொள்ளை கும்பல் ஒன்றினால் வீடொன்று உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகை பணம் என்பவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிமை மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டில் இருந்தவர்கள், வெளியே சென்றிருந்த வேளை , வீட்டினுள் அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளை கும்பல், வீட்டின் கதவுகளை உடைத்து, வீட்டினுள் புகுந்து இரண்டு இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் பணம் ,…
-
யாழில். ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் – வாகனங்களுக்கும் தீ வைப்பு!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினுள் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் அடங்கிய வன்முறை கும்பல் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, தாக்குதலை…