Tag: #srilankannews
-
யாழில். கடலில் மிதந்து வந்த வோக்கி மீட்பு
யாழ்ப்பாணத்தில் கடலில் அடித்து வரப்பட்டு , கரையொதுங்கிய மர்ம பெட்டி ஒன்றில் இருந்து தொலைத்தொடர்பு சாதனம் மீட்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது. அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கரையொதுங்கிய பெட்டியை திறந்து பார்த்த வேளை அதனுள் தொலைத்தொடர்பு சாதனம் ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
-
யாழ்.இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்!
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தி, எமக்கு விரைவில் தீர்வினை பெற்று தராது விட்டால் நாங்கள் நாடாளுமன்றை முற்றுகையிட்டு போராடுவோம்…
-
தாக்குதலாளிகளை கைது செய்ய தவறின் வீதியில் இறங்கி போராடுவோம்!
யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி , வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை விரைவாக முன்னெடுத்து உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்னதாக நிறுத்த அரசு தவறுமாயின் ஊடகவியலாளர்களாகிய நாம் வீதிகளில் இறங்கி போராட பின்னிற்கப்போவதில்லையென யாழ்.ஊடக அமையம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் வீட்டின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் சுதந்திர ஊடக அமைப்பு காவல்துறை அதிபருடன் கொழும்பில் நேரில் பேச்சுக்களை நடாத்தியுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு வருகை…
-
கனடாவில் அதிர்ச்சி சம்பவம்… 16 வயது சிறுவன் துப்பாக்கிச்சூடு கொலை!
கனடாவின் ஸ்காப்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 வயதான சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.பிற்பகல் வேளையில் இந்த 16 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பில் டொரன்டோ போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிளைன்டோவர் பிளாசா பகுதியில் வாகன தரிப்பிட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு அங்காடிக்கே எதிரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை காணொளிகள் மூலம் தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்த…
-
பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்கும் கனடா!
நாட்டின் பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்கப்படும் என கனடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் தெரிவித்துள்ளார். இந்த தசாப்தம் பூர்த்தியாகும் முன்னதாக நேட்டோ கூட்டுப் படையின் பரிந்துரைகளுக்கு அமைய பாதுகாப்பு செலவுகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு வீதத்தை பாதுகாப்பு செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென நேட்டோ அமைப்பு கோரியுள்ளது.
-
வடக்கில் காற்றின் வேகம் அதிகரிக்கும்!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. . இதேவேளை, புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக…
-
மட்டக்களப்பில் பெண் மீது துப்பாக்கி சூடு – ஒருவர் கைது!
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதேவேளை துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி, இலாஹா வீதி, பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த குடும்ப பெண்ணான 32 வயதுடைய சித்தீக் சிபானியா எனும் பெண்ணின் மீது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்ணின் கணவர் அவுஸ்ரேலியாவில்…
-
மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளான். காரைதீவைச் சேர்ந்த மாணவன் எஸ்.அக்சயன் (வயது-20) எனும் மாணவனே உயிரிழந்துள்ளான். காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவராவார். இவர் அண்மையில் வெளியான G.C.E A/L 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மாவட்டத்தில் 23 வது இடத்தில் மருத்துவ துறைக்கு தெரிவாகியிருந்தார். அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று…
-
யாழில். மைதானத்திற்கு புகுந்து வாள் வெட்டு – தாக்குதலாளிகளை மடக்கி பிடித்து நயப்புடைத்த ஊரவர்கள்!
யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் , இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். மீசாலை பகுதியை சேர்ந்த சிவகுமார் ராகுலன் (வயது 25) எனும் இளைஞனே வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட 12 பேரை கொண்ட வன்முறை கும்பலில் நான்கு பேரை ஊரவர்கள் மடக்கி பிடித்து, நயப்புடைத்து , மின்…
-
மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பேன்!
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். நான் யாழ்ப்பாணத்தில் ஒரு மைதானத்தில் இளைஞர்களுடன் கதைத்த ஒரு விடயத்தைச் சிலர் சர்ச்சையாக்கியுள்ளனர். அதனை வைத்து எனக்கு எதிரான பிரசாரங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். நல்லாட்சி காலத்தில் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு…