Category: பிரதான செய்தி
-
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் குழப்ப நிலை! வைத்தியர் அர்ச்சுனா அம்பலப்படுத்தும் உண்மைகள்
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் தோன்றியுள்ள பெரும் குழப்பநிலைக்கு மத்தியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வாக்குமூலமொன்றை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். வைத்தியசாலை நடவடிக்கையில் இருந்து இடை விலகிய வைத்தியர்கள் சிலர் யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு பயந்து செயற்படுவதாகவும் கூறியுள்ளார். வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அதனை மனிதஉரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் சாவகச்சேரி ஆதார…
-
பாரியளவிலான உலை எண்ணெய் மோசடி சிக்கியது!
கெரவலபிட்டிய – யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உலை எண்ணெய் திருடப்பட்டு, அவற்றை வேறு நிறுவனங்களுக்கு விற்கும் மோசடியொன்றை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் புலனாய்வுப் பிரிவு நேற்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றிவளைப்பின் போது, திருடப்பட்ட 33,000 லீற்றர் உலை எண்ணெயுடன் பவுசர் வாகனம் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது பெரிய அனல் மின் நிலையமான கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம்…
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கார் – சிக்கிய பெண்
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உரிமையாளர் இன்றி பல வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் எல்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் குறித்த கார் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் SPKM- 8179 Nissan Bluebird கார் கட்டுநாயக்க விமான நிலைய வருகை தரமுனைய வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கார் அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த வெலேகே மாயா சுதேசிகா என்ற பெண்ணுக்கு சொந்தமானதாகும்.…
-
கொழும்பில் உயிரிழந்த மாணவன், மாணவி தொடர்பில் -தகவல்கள் வெளியிட்ட போலீஸ்
logo Desktop Home Business Notice Events More கொழும்பில் உயிரிழந்த மாணவன், மாணவி – பொலிஸார் வெளியிட்ட தகவல்கள் கொழும்பில் நேற்று உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 15 வயதான குறித்த இருவரும் காதல் தொடர்பில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொம்பனிவீதி அல்டைர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து நேற்றிரவு (02/07/2024) விழுந்து 15 வயதுடையவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக பொலிஸார்…
-
சம்பந்தன் அவர்களின் உடலம் பாராளுமன்றில் வைக்கப்பட்டு யாழ் எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் உடல் : ஏற்பாடுகள் தீவிரம்
இன்று மூன்று மணியளவில் பாராளுமன்றில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இரா.சம்பந்தனின் உடல் நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும் உடல் அங்கு தந்தை செல்வா அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக அங்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக சம்பந்தனின் உடல் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க சம்பந்தனின் குடும்பத்தார் அவரது உடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு…
-
பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது ஹிஸ்புல்லா அமைப்பு
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிலிருந்து அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் நீக்கியுள்ளது. ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதால் அவா்களுடன் தகவல் தொடா்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாத நிலை உள்ளதாக, அரபு நாடுகளின் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஹோஸம் ஸாகி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினரை நீக்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்னதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹிஸ்புல்லா படையை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சோ்த்திருந்ததாகவும், இது…
-
ஹிருணிகா சார்பில் பிணை மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை சவால் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார். இந்த பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்…
-
என்னிடம் ஒப்படைக்கப்பட்டது டைட்டானிக் கப்பல்!
இன்று தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டிற்காக மௌனமாக பாரிய பணிகளை செய்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த புதிய அரசியல் பயணத்தை பாதுகாத்து அதனை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கி செல்லும் வழிகள்…
-
புதிய பேருந்து கட்டண பட்டியல் இதோ வெளிவந்துள்ளது
இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கையின்படி, 12 நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் திகதி பேருந்துக் கட்டணத் திருத்தம் செய்யப்படுகிறது. இவ்வருட கட்டண திருத்தத்தில் பேருந்து கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதுடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணமான 30 ரூபாய் கட்டணம் 28 ரூபாய் வரை இரண்டு ரூபாவால் குறைக்கப்படவுள்ளளது. இதன்படி அதிவேக வீதிகள்…
-
சம்பந்தனின் இழப்பு ஒரு சகாப்தத்தின் முடிவு: சஜித் இரங்கல்
சம்பந்தனின் இழப்பு இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமது எக்ஸ் தளத்திலே இந்த பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு சேவையாற்றிய சம்பந்தனின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும். https://twitter.com/sajithpremadasa?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1807611861174722863%7Ctwgr%5Efe1e970910bb7c33f0eab8b78015ddbb0809876d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamilwin.com%2Farticle%2Fsampanthan-loss-end-of-era-sajith-s-condolences-1719814557 என்றுள்ளது குறிப்பிடத்தக்கது