Category: பிரதான செய்தி
-
புதிதாக 75,000 வேலை வாய்ப்புகள்!
ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத் துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும் என்றும், அதற்கு அவசியமான அடித்தளத்தை அரசாங்கம் இட்டுள்ளதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதி வலயமாக 1000 ஏக்கர் பரப்பளவில் பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் இரண்டாம், மூன்றாம் கட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் இன்று (12) நடைபெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டில் புதிய ஏற்றுமதிப்…
-
கொழும்பில் நடந்த படுகொலையை நேரலையில் பார்வையிட்ட கும்பல்: வெளிநாட்டிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை
கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியலில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களை அடுத்து பாதாள உலகக் குழுவினரின் அட்டகாசம் தீவிரம் அடைந்துள்ளது. கிளப் வசந்த படுகொலை செய்யப்படுவதை, கொலைத் திட்டத்தை செயல்படுத்தியதாக கூறப்படும் சஞ்சீவ புஸ்பகுமார அல்லது லொக்கு பெட்டி நேரலையில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை அவர் தனது கைப்பேசி மூலம் நேரலையில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கிளப் வசந்த குறித்த நிலையத்தை திறக்க வந்ததில் இருந்து சுட்டுக் கொல்லப்படும் வரை நேரலையாக காட்சிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
-
பணிக்கு சமூகமளிக்காத ரயில்வே ஊழியர்களுக்கு சிவப்பு கடிதம்
பணிப்பகிஷ்கரிப்பின் போது பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் “சேவையில் இருந்து விலகியதாக கருதம்” கடிதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை கடைப்பிடிக்காது பணிப்புறக்கணிப்பில் ஈடும் ரயில் நிலைய அதிபர்களுக்கு இந்த கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இன்று (11) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்களுக்கு ரயில்வே பொது முகாமையாளரால் அந்த கடிதங்கள்…
-
துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி
அனுராதபுரம் – ருவன்வெலிசாய பொலிஸ் காவல் அரனில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அனுராதபுரத்தை சேர்ந்த 55 வயதான பொலிஸ் அதிகாரியே சம்பவத்தில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
-
நுவரெலியாவில் பேருந்து விபத்து – 42 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி
நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்தில் – 42 இற்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே, வீதியை விட்டு விலகி…
-
கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: பாடகி சுஜீவாவின் கணவரின் உடல் அடக்கம்
கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: பாடகி சுஜீவாவின் கணவரின் உடல் அடக்கம் அதுருகிரியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த பாடகி கே. சுஜீவாவின் கணவர் நயன வசுல விஜேசூரியவின் இறுதிக் கிரியைகள் இன்று (10) தலஹேன பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அதுருகிரிய…
-
ஜனாதிபதியின் பதவிக்கால சட்டத்தில் திருத்தம்
ஜனாதிபதியின் பதவிக்கால சட்டத்தில் திருத்தம் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் தொடர்பாக அரசியலமைப்பின் இரண்டு சரத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள வருடங்களின் எண்ணிக்கையை திருத்துவதற்கான அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நேற்று (09.07.2024) முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசியலமைப்பின் 30 (11)ஆவது பிரிவின் படி, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். அதேவேளை, அரசியலமைப்பின் உறுப்புரை 62 (11)இன் படி, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து…
-
நாளையும் நாளை மறுதினமும் அரச சேவை முடங்கும் அபாயம்!
200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் நாளை 08 தாக்கியும் மற்றும் நாளை மறுதினமும் 09 திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரிகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவை அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அஞ்சல் ஊழியர்கள் உட்பட பல அரச சேவை…
-
இலங்கையில் எதிர்வரும் ஜனவரி முதல் புதிய வரி
முட்டை விலையில் 15 சதவீத வற் வரி விதிக்கப்பட உள்ளதென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.டி.ஆர். அழககோன் தெரிவித்துள்ளார். இதனால் நுகர்வோர் அதிகாரசபை நிர்ணயித்த விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 02 செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் அதிகாரசபை மீண்டும் முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. அதற்கமைய, வெள்ளை முட்டை 43-47 ரூபாய்க்கும், பழுப்பு நிற முட்டை 45-49 ரூபாய்க்கும் விற்கப்பட வேண்டும்.…
-
விசேட அதிரடி படை சுற்றிவளைத்து பிடிக்கப்பட்ட சிங்கள யுவதி
மொரட்டுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மொரட்டுவ படை முகாமின் மோட்டார் சைக்கிள் அணி அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுவின் அதிகாரிகள் குழு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை லுனாவ பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த யுவதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த வீட்டில்…