Category: கனடா செய்திகள்

  • ரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு!

    ரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு!

    சிறு வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் அதிகளவில் இலக்கு வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வங்கி அட்டைகள் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு உதவும் இயந்திரங்கள் இவ்வாறு களவாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு வியாபாரங்களில் ஈடுபடுவோர் இந்த நடவடிக்கைகளினால் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2023ம் சுமார் 300 சிறு வியாபார நிறுவனங்களின் விற்பனை இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளன. இவ்வாறான களவுச் சம்பவங்களினால் சில நிறுவனங்கள் 50,000 டொலர்கள் வரையில் நட்டமடைந்துள்ளன

  • கனடாவில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கைது!

    கனடாவில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கைது!

    ஒன்றாரியோ மற்றும் மொன்றியாலில் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அண்மைய நாட்களில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வாகனக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ மற்றும் மொன்றியல் காவற்துறையினர் கூட்டாக அறிவித்துள்ளனர். இது தொடர்பில் கூட்டு ஊடக சந்திப்பு ஒன்றும் நடத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில்; குறித்த கும்பல் வாகனக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒன்றாரியோவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள்…

  • வான்கூவர் தீவுகளில் ஒரே நாளில் 2,000 நிலநடுக்கங்கள்!

    வான்கூவர் தீவுகளில் ஒரே நாளில் 2,000 நிலநடுக்கங்கள்!

    வான்கூவர் தீவுகளில் இந்த மாத துவக்கத்தில், ஒரே நாளில் 2,000 முறைக்கும் அதிகமாக நிலநடுக்கங்கள் உருவானதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அது பயத்தை ஏற்படுத்தும் செய்தி அல்ல என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

  • கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு கிடைக்கும் வாய்ப்பு!

    கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு கிடைக்கும் வாய்ப்பு!

    கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கனடாவில் தற்காலிகமாக வதியும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்கும் போது கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தொழில் தகமை, பிரெஞ்சு மொழித் திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தற்காலிகமாக வதிவோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. தொழில் மற்றும் கல்வி நோக்கில் கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு துரித கதியில் நிரந்தர வதிவுரிமை கோரிக்கை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

  • கனடாவில் சிறுவனுக்கு வைன் விற்று சிக்கலில் மாட்டிய சங்கிலி நிறுவனம்!

    கனடாவில் சிறுவனுக்கு வைன் விற்று சிக்கலில் மாட்டிய சங்கிலி நிறுவனம்!

    கனடாவில் சிறுவன் ஒருவனுக்கு வைன் விற்பனை செய்த பிரபல நிறுவனமொன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி பல்பொருள் விற்பனை சங்கிலி நிறுவனங்களில் ஒன்றான லொப்லொவ் (Loblaws) நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமது நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் 16 வயது சிறுவனுக்கு வைன் விற்பனை செய்ததனை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் சர்ரே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவனுக்கு வைன் விற்பனை செய்த குற்றத்திற்காக ஏழாயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம்…

  • அல்பேர்ட்டாவில் வெளிநாட்டவர்களுக்கான தொழில் வாய்ப்பும் நிரந்தர வதிவுரிமையும்!

    அல்பேர்ட்டாவில் வெளிநாட்டவர்களுக்கான தொழில் வாய்ப்பும் நிரந்தர வதிவுரிமையும்!

    மாகாணத்தில் விருந்தோம்பல் தொழிற்துறையில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன. எதிர்வரும் 2035ம் ஆண்டளவில் மாகாணத்தின் சுற்றுலா கைத்தொழிற்துறையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அல்பேர்ட்டா மாகாணம் இதற்கென பிரத்தியேகமான ஓர் குடிவரவு திட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது. விருந்தோம்பல் தொழிற்துறைசார் தகுதியுடைய வெளிநாட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கனடாவில் ஏற்கனவே தற்காலிக அடிப்படையில் சுற்றுலாத்துறை தொழில்களில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டுப் பிரஜைகள், நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது.…

  • கனடா செல்ல ஆசைப்படுகிறீர்களா?: தொழில் வாய்ப்பை வழங்கும் முக்கிய மாநிலம்

    கனடா செல்ல ஆசைப்படுகிறீர்களா?: தொழில் வாய்ப்பை வழங்கும் முக்கிய மாநிலம்

    உலகில் மிகப்பெரிய நாடுகளில் கனடாவும் ஒன்றும். இங்கு நிலப்பரப்புக்கு ஏற்ப மக்கள் தொகை இல்லை என்பதுடன், பலநாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களால் இங்கு தொழில்துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவுக்கு சென்றால் அகதி அந்தஸ்து கிடைப்பது உறுதியென அங்குள்ள புலம்பெயர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பல்வேறு சட்டவிரோதமான வழிகளை பின்பற்றியாவது கனடாவுக்கு செல்ல வேண்டுமென்பதில் உலகளாவிய ரீதியில் பலரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் வெளிநாட்டவர்களுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் நிரந்தர வதிவுரிமை பெறுவது குறித்த ஒரு…