Category: கனடா செய்திகள்

  • அதிகரிக்கப்படவுள்ள சம்பளம் !

    அதிகரிக்கப்படவுள்ள சம்பளம் !

    கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி, குறித்த மாகாணத்தின் குறைந்த பட்ச சம்பளம் 65 சதங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பள அதிகரிப்பானது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், தற்போது கனடாவில் மணித்தியாலம் ஒன்றுக்கு வழங்கப்படும் 16.55 டொலர் சம்பளம் 17.20 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

  • கனடா வரும் மாணவர்களுக்கான அறிவித்தல் !

    கனடா வரும் மாணவர்களுக்கான அறிவித்தல் !

    கனடாவில் கல்வி கற்க உத்தேசிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் மாணவர்களின் நலன்களை உறுதி செய்யும் வகையிலான திட்டமொன்றை கனடாவின் ஒன்றாரியோ அறிமுகம் செய்ய உள்ளது. கனடிய தொழிற்சந்தையில் போட்டித் தன்மை நிலவும் துறைசார் கற்கை நெறிகளுக்கு வெளிநாட்டு மாணவர்கள் உள்ளீர்க்கப்பட உள்ளனர். குறிப்பாக கற்கை நெறிகளில் தொழிற்சந்தை கேள்வியின் அடிப்படையிலான வீசா வழங்கும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. விருந்தோம்பல், சிறுவர் பராமரிப்பு, கணிதம், விஞ்ஞானம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.…

  • அதிகரித்து வரும் தட்டம்மை நோய்!

    அதிகரித்து வரும் தட்டம்மை நோய்!

    தட்டம்மை நோய்த் தொற்று பரவுகை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணத்தினால் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார். மேலும்,நாடு முழுவதிலும் இந்த வருடம்,தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனவே பெற்றோர்  தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசிகளை உரிய நேரத்தில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  

  • வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

    வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

    வாடகை குடியிருப்பாளர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சரியான முறையில் நேர்மையாக வாடகை செலுத்துவோருக்கு நலன்களை வழங்கு சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.மத்திய அரசாங்கம் இந்த புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மாதாந்தம் 2000 டொலர் வாடகை செலுத்துவோருக்கு கிடைக்காத சலுகைகள் அடகுக் கடன் தவணை செலுத்துவோருக்கு கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இளம் கனடியர்கள் தங்களது கடின உழைப்பினை வாடகைக்காக செலவிட்டு…

  • வீடொன்றில் நான்கு சடலங்கள் மீட்பு!

    வீடொன்றில் நான்கு சடலங்கள் மீட்பு!

    கனடாவில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கனடாவின், சஸ்கற்றுவானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தகவல் கிடைத்து அதிகாரிகள் சென்று பார்த்தவேளை நால்வர் இறந்து கிடந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சடலங்கள் மீட்கப்பட்டமையால் பொதுமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இருப்பதாக தாங்கள் நம்பவில்லை என்றும், அவ்வாறு தெரியவந்தால் பொது எச்சரிக்கையை வெளியிடுவோம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

  • மூன்றாண்டுகளுக்கு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் வீதி !

    மூன்றாண்டுகளுக்கு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் வீதி !

    ரொறன்ரோவின் கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து இவ்வாறு வரையறுக்கப்பட உள்ளது. நேற்று முதல் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மிகவும் பழமையான இந்த பாதை பழுதுபார்க்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்றாண்டுகள் இந்தப் பாதை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையின் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கனடா வாழ் தமிழ்-முஸ்லிம் மக்கள் அனுரவிடம் விடுத்துள்ள கோரிக்கை !

    கனடா வாழ் தமிழ்-முஸ்லிம் மக்கள் அனுரவிடம் விடுத்துள்ள கோரிக்கை !

    நாட்டின் நெருக்கடி நிலைமைகளை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு, கனடா வாழ் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவிற்கு விஜயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும், அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்தும் இலங்கையின் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் போதியளவு தெளிவு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தெற்கில் போன்றே வடக்கிற்கு சென்று மக்களை தெளிவுபடுத்துமாறு தம்மிடம்…

  • அதிகரித்துள்ள திருட்டு சம்பவங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

    அதிகரித்துள்ள திருட்டு சம்பவங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

    ரொறன்ரோவில் கடன் அட்டை இயந்திர திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வங்கி அட்டைகள் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு உதவும் இயந்திரங்கள் இவ்வாறு திருடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகளவில் சிறு வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் இலக்கு வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு வியாபாரங்களில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் கூறப்படுகின்றது.கடந்த 2023ஆம் ஆண்டு சுமார் 300 சிறு வியாபார நிறுவனங்களில் கடன் அட்டை இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறான களவுச்…

  • கனடாவில் பதிவான நிலநடுக்கம் !

    கனடாவில் பதிவான நிலநடுக்கம் !

    வான்கூவர் தீவுகளில், இம்மாத தொடக்கத்தில் ஒரே நாளில் 2,000க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது குறித்து யாரும் அச்சமடைய தேவையில்லை எனவும் இது ஒரு இயற்கையான நிகழ்வு தான் எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தவிரவும் இந்த நிலநடுக்கங்கள் மிகவும் பெரிய அளவில் இல்லாமல் மிகச்சிறிய ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளன, அதாவது அந்த நிலநடுக்கங்கள் அனைத்துமே ரிக்டர் அளவில், 1க்கும் குறைவான அளவிலேயே பதிவாகியுள்ளன. கடலுக்குக் கீழே உள்ள நிலப்பரப்பில், அதாவது கடல்படுகையில், இரண்டு புவித் தட்டுகள் மெதுவாக…

  • கனடிய அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி தோல்வி!

    கனடிய அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி தோல்வி!

    கொன்சவடிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். கார்பன் வரி அறவீடு செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அதற்கு போதியளவு ஆதரவு கிடைக்கவில்லை. யோசனைக்கு ஆதரவாக கொன்சவடிவ் கட்சியினர் வாக்களித்த போதிலும், லிபரல், என்.டி.பி மற்றும் குபெக்கோ போன்ற கட்சிகள் எதிராக வாக்களித்திருந்தன. இந்த யோசனைக்கு ஆதரவாக கூடுதல் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால்…