Category: உலக செய்திகள்
-
இலங்கைக்கு வருவதற்கு விமான நிலையத்தில் காத்திருந்த பெண் மரணம்
நாட்டுக்கு திரும்புவதற்காக குவைத் விமான நிலையத்தில் காத்திருந்த இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான நிரோஷா தமயந்தி என்ற 48 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக கடந்த 9ஆம் திகதி குவைத் சென்றிருந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். உடல்நல குறைவால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தமது தாயார் நோயின்றி மகிழ்ச்சியாக…
-
நிதிநெருக்கடியை ஏற்பட்டுத்த திட்டம்; ஹெஸ்புல்லா வங்கிகளை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்!
லெபனான் தலைநகரில் ஹெஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தும் வங்கிககளை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. பெய்ரூட்டின் தெற்குபுறநகர் பகுதிகளில் உள்ள அல் ஹார்ட் அல் ஹசன் வங்கியின் கிளைகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது . பெய்ரூட்டின் சர்வதேச விமானநிலையத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளைகளையும் இஸ்ரேல் தாக்கியுள்ளது. விமானநிலையத்தி;ற்கு அருகில் உள்ள கட்டிடமொன்றை இஸ்ரேலின் விமானங்கள் தாக்குவதையும் அந்த கட்டிடம் இடிந்து விழுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. பெய்ரூட்டின் தென்பகுதியில் பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அல் ஹார்ட் அல்…
-
அமெரிக்காவில் வெற்றி கொண்டாட நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு! 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் உள்ள மிசிசிபி மாகாணம், ஹொல்மெஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹொல்மெஸ் நகரில் பாடசாலைகளுக்கு இடையே நடைப்பெற்ற கால்பந்து போட்டியில் அப்பகுதியை சேர்ந்த பாடசாலை சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, இந்த வெற்றியை கொண்டாட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த நிகழ்ச்சி இன்றையதினம் நடைபெற்ற நிலையில அப்போது அங்கு அந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தபோது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.…
-
இத்தாலியில் வாகன விபத்தில் இலங்கை இளைஞன் பலி
இத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த அகில பெர்னாண்டோ என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வெளிநாட்டவர் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் கார் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த நிலையில், மீண்டும் இத்தாலிக்கு சென்ற சில நாட்களில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
-
இருளில் மூழ்கிய கியூபா; ஒரு கோடி பேர் பாதிப்பு!
கியூபாவில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டால் சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கியூபாவின் மிகப்பெரிய மின் நிலையங்களில் ஒன்று செயலிழந்ததையடுத்து மின்சாரத்தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மின் பற்றாக்குறையை சமாளிக்க பாடசாலைகள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் ஒரு சில அரசு அலுவலகங்களை தற்காலிகமாக மூடுமாறு கியூபா அரசு உத்தரவிட்டுள்ளது. அதேவேளை அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடால் கியூபா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
-
கனடாவில் வேலைவாய்ப்பு: பராமரிப்பு பணியாளர்களுக்கு அதிக தேவை
கனடா உலகம் முழுவதிலும் இருந்து பராமரிப்பாளர் (Caregivers) பணிகளுக்கான திறமையான நபர்களை அழைக்கிறது. பராமரிப்பாளர் பணியை சமூகத்திற்கு பயனுள்ள தொழில்முறையாக கருதுமாறு கனடா ஊக்குவிக்கிறது. விசா ஸ்பான்சர் ஜாப்ஸ் இணையதளத்தின் தகவல்படி, கனடாவின் பல பராமரிப்பாளர் வேலைவாய்ப்புகள் விசா ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகளுடன் வருகிறது. இதன் மூலம் சர்வதேச விண்ணப்பதாரர்கள் எளிதில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைகள் தேவையுடையோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது. வயது: 22 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். – கல்வி மற்றும் அனுபவம்: குறிப்பிட்ட…
-
மத்திய கிழக்கை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஹிஸ்புல்லா: ஹமாஸ் தலைவர் தொடர்பில் பரபரப்பு காணொளி
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டமையானது இஸ்ரேலுடனான மோதலை ஒரு புதிய அணுகுமுறைக்கு கொண்டுசெல்லும் என ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாகவும், தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கத் தாங்கள் தயாராக உள்ளதாகவும் ஹிஸ்புல்லா அமைப்ப கூறியுள்ளது. ஹமாஸ் தலைவர் இறப்பதற்கு சற்று முன்பு இஸ்ரேலின் ஆளில்லா விமானம் அவருக்கு அருகில் பறந்து செல்லும் காணொளியை இஸரேலிய பாதகாப்பு அமைச்சு வெளியிட்டதடக் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஹிஸ்புல்லா மற்றும்…
-
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொலை – காசா ரோந்து நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் காசா பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் வெளி விவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார். ஆயினும் இதுவரை ஹமாஸ் அமைப்பு எவ்வித அறிக்கைகளையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலியப் படையினரால் யஹ்யா சின்வார் நேற்று (17) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் வெளி விவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளைக்காரர்’ யஹ்யா சின்வார் என அவர் வர்ணித்துள்ளார். இஸ்ரேல் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ள…
-
மில்டன் சூறாவளி புயல்; இருளில் தவித்த 20 லட்சம் மக்கள்
அமெரிக்காவில் மில்டன் சூறாவளி புயல் உருவான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியபோதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் தவித்தனர். புளோரிடா மாகாணத்தில் சீஸ்டா கீ பகுதியருகே அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.30 மணியளவில் மில்டன் சூறாவளி புயல் கரையை கடந்தது. இதனால், மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி சென்ற சூறாவளி வலுவிழந்தது. சூறாவளியின் தீவிரம் குறைந்தபோதும், அதிக ஆபத்து ஏற்படுத்தும் பிரிவிலேயே மில்டன் வைக்கப்பட்டு உள்ளது.…
-
ஐ.எஸ். குழு பிடித்த பெண் காசாவில் மீட்கப்பட்டார்
ஈராக்கில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) குழுவால் 2014 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட யாசிதி பெண் ஒருவர் 21 வயதில் காசாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். ஈராக், இஸ்ரேல், ஜோர்தான் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட இரகசிய நடவடிக்கை மூலமே அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளார். ஈரான் மற்றும் சிரிய நிலப்பகுதிகளை ஐ.எஸ். குழு ஆக்கிரமித்தபோது அங்குள்ள சிறுபான்மை யாசிதி மக்கள் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டதோடு பலரும் கொல்லப்பட்டனர். அப்போது 11 வயது சிறுமியாக இருந்த இந்தப் பெண் ஐ.எஸ். குழுவால் பிடிக்கப்பட்டு…