Category: இந்திய செய்திகள்
-
10 வயது சிறுமிக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை! 10 வயது சிறுமிக்கு ஒரு வருடம் பாலியல் தொல்லை!
பத்து வயது சிறுமிக்கு ஒராண்டுக்கு மேலாக பாலியல் தொந்தரவு அளித்து வந்த சிறுமியின தாத்தாவை பொலிசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியில் அறுபத்து ஏழு வயது மீனவரின் மகன் கடந்த சில வருடங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மருமகள் தனது பெண் குழந்தையை மாமனாரிடம் ஒப்படைத்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பெண் குழந்தையை வளர்த்து வந்த தாத்தா, கடந்த ஒராண்டுக்கும் மேலாக 10 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்து இருக்கிறார்.
-
ஜம்மு காஷ்மீர் கோர விபத்தில் சிக்கி 08 பேர் பலி
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தக்சும் பகுதியில் மோட்டார் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 05 பிள்ளைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து பிள்ளைகளும் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மோட்டார் வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பற்றி எரியும் வங்கதேசம்.. இடஒதுக்கீடு எதிர்ப்பால் கடும் வன்முறை.. 32 பேர் பலி.. பிரதமர் தான் காரணமா?
இந்தியா டாக்கா: வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்துக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. இதில் 32 பேர் பலியான நிலையில், 2,500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டத்தில் வங்கதேசத்தில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில் போராட்டத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். தமிழகத்தின் அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. வங்கேதசத்தின் பிரதமராக இருப்பவர் ஷேக் ஹசீனா. இவர் அவாமி லீக் கட்சியை…
-
2 குழந்தைகள் உட்பட 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்!
தலைமன்னாரில் இருந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அகதிகளாக நேற்று (05) வெள்ளிக்கிழமை காலை தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.என அறியப்படுகிறது தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோக வள்ளி (வயது 34), அவரது பிள்ளைகளான அனுஜா (வயது 08), மிஷால் (வயது 05) ஆகியோர் தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்தனர். தகவல் அறிந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்து விசாரணைக்காக 3 பேரையும்…
-
ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்த மோடி!
மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு வழங்கியமைக்கு பிரதமர் நரேந்திர மோடி (Narendira Modi) நன்றி தெரிவித்துள்ளார்.தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்திய வரலாற்றில் இது ஒரு சாதனை எனவும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை, கடந்த பத்தாண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
-
திருகோணமலையில் விபத்து: பாடசாலை மாணவி படுகாயம்!
திருகோணமலை (Trincomalee) தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்றையதினம் (23.04.2024) குறித்த மாணவி வீதியை கடக்க முற்பட்ட போது வான் ஒன்று மோதியதால் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, சம்பவம் தொடர்பாக கண்டியை (Kandy) சேர்ந்த 32 வயதுடைய வான் சாரதி திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
-
வவுனியாவில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் கடந்த 3 ஆம் பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் மாணவனின் முகத்திலும், தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.…
-
கொழும்பு பிரதான மார்க்கத்தில் தடம்புரண்ட தொடருந்து!
மருதானை மற்றும் தெமட்டகொடை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தகவலை இலங்கை தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதனால் பிரதான தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மஹோ நோக்கி பயணித்த தொடருந்து தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
-
அமலாக்கத்துறை, ஐ.டி, சி.பி.ஐ.தான் பிரதமர் நரேந்திரமோடியின் குடும்பம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சென்னை : ‘அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. தான். பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில செய்தி நாளேடு. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டுவிட்டன.
-
பிரசாரத்தின் போது கடையில் கூழ் குடித்து யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்திய தமிழிசை
சென்னை, தென்சென்னையில் பிரசாரத்தின் போது கடையில் கூழ் குடித்து யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தினார் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை. தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இவர் தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.