Author: Yalarasan
-
ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பேர் கைது
மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று (16) இரவு ரோந்து பணியின் போது. கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் வசிக்கும் சந்தேகநபர்கள் இருவரும் வடகிழக்கு…
-
நாளை பதவியேற்கும் புதிய அமைச்சரவை! அநுர மற்றும் விஜிதவிற்கு பலமான அமைச்சுக்கள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளைய(18) தினம் பதவியேற்கவுள்ளது. நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உள்ளடங்களாக தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவை 50 பேரைக் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், புதிய அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய பதவியேற்கவுள்ளதாகவும், விஜித ஹேரத்திற்கு ஒரு பலமான அமைச்சுப்…
-
சத்தியலிங்கத்தின் இறுதிக் கையொப்பம் : காத்திருக்கும் அதிர்ச்சி
சத்தியலிங்கத்தின் இறுதிக் கையொப்பம் : காத்திருக்கும் அதிர்ச்சி தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் ப. சத்தியலிங்கம் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளதாக சுமந்திரனால் வெளியிடப்பட்ட கருத்து பலர் தரப்பிலும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், “முன்னதாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகாத யாரும் இந்த தேர்தலில் போட்டியிட கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்தார். அது மாத்திரமின்றி, இத்தேர்தலில் சிறீதரன் போட்டியிட கூடாது என்றும்…
-
தேசிய பட்டியலுக்கான அளவுகோல்களை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு
தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதற்கான அளவுகோல்களை, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் அல்லது 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படாத வேட்பாளர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட முடியும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் தேசிய பட்டியல் மூலம் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
-
தமிழரசுக் கட்சிக்கு முக்கியஸ்தர்கள் தெரிவு..!
தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக ப.சத்தியலிங்கமமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட கூட்டம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் பல கருத்து ரீதியான வேறுபாடுகளை கடந்து எல்லோரது விருப்பங்களுடன் மன்னார், வவுனியா ஆகிய இடங்களின் இடைவெளியை கருத்தில்…
-
சுமந்திரனின் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார்..!
சுமந்திரனின் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார்..! நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய அரசமைப்பு வரைபை அநுர அரசு மீளக் கொண்டு வரப் போவதாகவும், தான் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் அந்தச் செயற்பாட்டைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையாளுவார் என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அந்த வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (16) நடத்திய ஊடக…
-
தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் கருத்து
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சியின் அரசியல் குழுவே இறுதி முடிவு எடுக்கும் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (16.11.2024) சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு முடிவும் கட்சியால் எடுக்கப்படவில்லலை. இதனால் கட்சியின் அரசியல் குழு கூடி ஒரு முடிவு எடுக்கும்…
-
வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு
வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் வவுனியா மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்றையதினம் (16) சம்பவித்துள்ளது. முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மணிவேல் பிள்ளை சஞ்சீவ் பிரதீபன் என்ற 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் முள்ளிவளை பொலிஸாரால் கடந்த (16.10.24) அன்று கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இரு குற்றவாளிகளுக்கு பிணை வைத்துள்ளதுடன் மற்றும் ஒரு குற்றச்செயல்…
-
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 2 முக்கியஸ்தர்கள் விரைவில் கைது
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் இரண்டு முக்கியஸ்தர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு பிரதானி ஒருவரும், அரசியல் கட்சியொன்றின் தலைவரும் கைது செய்யப்பட உள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. செனல்4 ஊடகத்திற்கு தகவல்களை வழங்கிய அசாத் மௌலானவிடம் இணைய வழியில் சாட்சியங்கள் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சாட்சியங்களின் அடிப்படையில் நீதிமன்றில் உத்தரவு பெற்றுக்கொண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட உள்ளனர். செனல்4 காணொளி…
-
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் விபரம்!
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பது தொடர்பில் உள்ளக பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. புதிய ஜனநாயக முன்னணி சார்பில் நடைபெற்று முடிந்த பொது தேர்தலில், தெரிவுசெய்யப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு மொத்தமான 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள்(இரண்டு பேர் தேசிய பட்டியலிலிருந்து) நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர். இதன்படி கட்சியின் நாடாளுமன்ற…