Author: Yalarasan

  • சீனாவால் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்காக 12 மில்லியன் ரூபா நிதி உதவி

    வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் நேற்று (20.11.2024) கையளித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று காலை இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். இதன்போது, அவர் இந்தக் காசோலையைக் கையளித்ததுடன் வடக்கு மாகாண…

  • நீரை சேமித்து வையுங்கள்! மூன்றாம் உலகப்போர் எச்சரிக்கையை விடுத்த ஐரோப்பிய நாடு

    மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளதால் உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை சேமித்துவைக்குமாறு சுவீடன் அரசாங்கம் அந்நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்த அந்நாட்டு இராணுவத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் தங்களின் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன. அந்தவகையில், சுவீடன் நாடு விடுத்துள்ள எச்சரிக்கையானது சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஐரோப்பாவின் முக்கியமான மற்றும் ஏழாவது பெரிய நாடாக கருதப்படும் ஜெர்மனி நாட்டின் அரசாங்கமும்…

  • கொழும்பில் சமூக பிறழ்வான முறையில் இயங்கிய விடுதிகள்: வியட்நாம் பெண்கள் கைது

    வாடிக்கையாளர்களிடம் இருந்து 35,000 ரூபாய் முதல் 50,000 வரை கட்டணம் வசூலித்து, கொழும்பில் சமூக பிறழ்வான முறையில் இயங்கிய இரண்டு விடுதிகளை நடத்திய, வியட்நாமியப் பெண்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினர் இந்த கைது நடவடிக்கையை இன்று (20) மேற்கொண்டுள்ளனர். இதன்படி, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வோர்ட் பிளேஸில் உள்ள வீடு ஆகியவற்றில் இருந்து, குடிவரவு திணைக்களத்தினர், ஏழு பெண்கள் உட்பட ஒன்பது வியட்நாம் நாட்டவர்களை கைது செய்தனர்.…

  • அநுரவிற்கு சவாலாகும் அமெரிக்க இராணுவ தரையிறக்கம் தொடர்பான ஒப்பந்தம்

    இலங்கை, அமெரிக்காவுடன் மேற்கொண்டு நிலுவையில் உள்ள சோஃபா ஒப்பந்தத்தினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசிற்கு சிக்கல் நிலைய ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “மைக் போம்பியோ, அமெரிக்காவினுடைய வெளியுறவு துறை செயலாளராக இருந்த போது, அதாவது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது ஆட்சி காலத்தின் இறுதி கட்டத்தின்போது போம்பியோ இலங்கைக்கு விஜயம்…

  • யாழ். ஊடக அமையத்துக்கு சீனத் தூதுவர் குழு விஜயம்

    இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் யாழ். ஊடக அமையத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். குறித்த விஜயமானது நேற்று (19) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். ஊடக அமையத்தின் போசகர் இ.தயாபரன், தலைவர் கு.செல்வக்குமார் உள்ளிட்டோர் தூதுவரை வரவேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வில், யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • பொலிஸ் அரசியலுக்கு முடிவு கட்டப்படும் : புதிய அமைச்சரின் உறுதிமொழி

    பொலிஸ் அரசியல் மயமாக்கலுக்கு முடிவு கட்டுவதற்கு, இலங்கையின் புதிய பொது பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளதுடன், இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். பொலிஸின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் புதிய பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால நேற்று (20) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கங்களின் கீழ் பொலிஸ்துறை அரசியல் மயமாக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை பொலிஸாரை அரசியல் செல்வாக்கிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி…

  • ஜனாதிபதியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் சட்டம்! இந்தியா தீவிர நாட்டம்

    புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 21 உறுப்பினர்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது உண்மையில் வரவேற்கத் தக்க விடயம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன்(A.Sarveshwaran) தெரிவித்தார். இதன் மூலமாக பல்வேறு நிதி வீண் விரயங்களைத் தடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை, ஜனாதிபதியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் சட்டம் தொடர்பிலும், இலங்கை குறித்து இந்தியாவின் அடுத்தக் கட்ட நகர்வு தொடர்பிலும் பேராசிரியர் இதன்போது தெளிவுபடுத்தினார் என்பது…

  • புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அதிரடி மாற்றம்! அநுர நினைத்தாலும் செயற்படுத்த முடியாத சிக்கல்

    கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் மக்கள் கொண்டிருந்த உச்சக்கட்ட துன்பத்தின் வெளிப்பாடு தான் இந்த ஆட்சி மாற்றம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம்(K.Amirthalingam) தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக 150 புதிய முகங்கள் நாடாளுமன்றத்திற்குள் வரப்போகின்றார்கள். அதற்கு இணையாக பல மூத்த அரசியல் தலைவர்கள் அனைவரும் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள் என்றும் அவர்…

  • புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம்

    அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளது. ஜனாதிபதி முன்னிலையில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு குறித்த பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதுடன், அமைச்சரவை அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாணமும் இடம்பெறவுள்ளது. இதேவேளை, 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் (21) காலை. புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 11.30க்கு வழங்குவார் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்…

  • சத்தியலிங்கம் – சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி…

    சத்தியலிங்கம் – சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி… தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பிலான சர்ச்சை நிலைகள் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தற்போது வலுப்பெற்று வருகிறது. எனினும் தமது கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அந்த நியமனங்களில் ஒருவராக கருதப்படும் பா. சத்தியலிங்கத்தினது உள்வருகையானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் திட்டமிடலின் ஒரு அங்கம் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அந்த வகையில் ஊடகம்…