Author: Yalarasan

  • அநுரவிற்கு ஆபத்தாகும் அரசியல் யாப்பு விவகாரம்

    இலங்கையின் அரசியல் யாப்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாற்றங்களை ஏற்படுத்துவராயின் அது அவருக்கு வாக்களித்த அனைத்து தரப்பினரையும் திருப்தியடைய செய்யும் என கூற முடியாது. இவ்வாறிருக்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை அநுர சுமத்தியிருந்தார். ஒரு நாட்டின் உண்மையான அபிவிருத்தி என்பது ஊழலற்ற ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதும் ஆகும். எனினும், இலங்கையில் ஊழலுக்காக அமைச்சர்கள் கூட கைதுசெய்யப்பட்ட வரலாறு மிகக்குறைவு. இந்நிலையில்,…

  • யாழில் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் கோடி கணக்கில் திருட்டு நகைகள் பொலீசாரால் மீட்ப்பு

    யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன…

  • 3ம் உலகப்போர் தொடங்கி விட்டது.. முட்டிமோதும் வல்லரசுகள்.. உடைத்து பேசிய உக்ரைனின் மாஜி படை தளபதி

    3ம் உலகப்போர் தொடங்கி விட்டது.. முட்டிமோதும் வல்லரசுகள்.. உடைத்து பேசிய உக்ரைனின் மாஜி படை தளபதி மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது என்று உக்ரைனின் முன்னாள் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு பிறகு அமெரிக்கா, வட கொரியா, ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டை சுட்டிக்காட்டி பரபரப்பை பற்றவைத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தால்…

  • அடுத்த மூன்று நாட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

    அடுத்த மூன்று நாட்களில் நாட்டின் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 23ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஒரு இலட்சம் ரூபாய் செலவிட்டு நாடாளுமன்றம் சென்ற பெண் சட்டத்தரணி ஒரு இலட்சம் ரூபாய் செலவிட்டு நாடாளுமன்றம் சென்ற பெண் சட்டத்தரணி அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென்மேற்கு…

  • பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

    இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று(22) முதல் விடுமுறை வழங்கப்படுகின்றது. அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுவதுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி…

  • கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் மர்மமான முறையில் கொலை

    கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த 70 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று பிற்பகல் கிருலப்பனை, காலிங்க மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதியில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் இருந்து சுமார் 8 பவுண் தங்கம் திருடப்பட்டுள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட பெண் கொலை செய்யப்பட்ட பெண் தனது கணவர், மகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வந்துள்ளார்.…

  • பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

    அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் அடுத்த மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்று…

  • உக்ரைன் மீது பயங்கர தாக்குதல்! வெகுநாட்களுக்கு பின் மீண்டும் தோன்றிய புடின்

    ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய ஏவுகணையை கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய ஜனதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். புடின் வெகுநாட்களாக பொதுவெளிகளில் தென்படவில்லை என்ற கருத்து பரவி வந்த நிலையில், நேற்றயதினம் (21.11.2024) உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக அவரே கூறியுள்ளார். மேற்கத்தைய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் பயன்படுத்தியதையடுத்தே, இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் மேற்கத்தைய நாடுகளையும்…

  • டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

    இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலை மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த பிடியாணை இன்றையதினம் (21) பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால்…

  • வடக்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமை குறித்து அதிருப்தியடைந்துள்ள நாமல்

    வடக்கு மாகாணத்தில் இராணுவ முகாம் ஒன்று அண்மையில் அகற்றப்பட்டமை குறித்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் மாதங்களில் மேலும் பல முகாம்களை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ள அவர், குடிமக்களுக்கு நிலத்தை மீள விடுவிப்பதில் பிரச்சினை இல்லை. எனினும், இந்த விடயத்தில் தேசிய பாதுகாப்பில் சமரசம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப் படைகளுடன் கலந்தாலோசித்து…