Author: Yalarasan
-
திருச்சி என்ஐடியில் மத்திய பிரதேச மாணவி 5-வது நாளாக மாயம்! போலீஸில் சிக்கிய கடிதம்! நடந்தது என்ன?
திருச்சி: திருச்சி என்ஐடியில் படித்து வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவி கடந்த 15 ஆம் தேதி முதல் காணவில்லை என புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர், திருச்சி என்ஐடியில் எம்சிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி விடுதியை விட்டு வெளியே…
-
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்தில் கனடா
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து சறுக்கிய கனடா, இந்த ஆண்டு, நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. Us wold & repport என்னும் அமைப்பு ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. பட்டியலில் கனடா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஜப்பானும், மூன்றாவது இடத்தை அமெரிக்காவும் பிடித்துள்ளன. விடயம் என்னவென்றால், கனடா இதற்கு முன் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது, தற்போது நான்காவது…
-
அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்: பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகளுக்கு ரணில் உத்தரவு
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு சபை நேற்றைய தினம் (19.09.2024) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. இதன்போது எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. see அத்துடன் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், வாக்குச்…
-
பசிலும்- நாமலின் பிள்ளைகள் நாட்டிலிருந்து வெளியேறினார் மொட்டு கட்சி வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு
பசில் ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் அவர், கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக விரைவில் நாடு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பசில் சென்றதற்கான காரணம் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இன்று அதிகாலை இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் சில வாரங்களுக்கு முன்னர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருந்தார். எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…
-
லெபனானில் வெடித்து சிதறிய பேஜர்கள் வாக்கி டாக்கிகள்; கத்தார் ஏர்வேஸ் அதிரடி அறிவிப்பு!
லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையத்தில் பயணம் செய்யும் மக்கள் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்ததுடன் 3000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். லெபனான் தெற்கு பகுதிகளிலும், தலைநகர் பெய்ரூட்டின் பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லாவினரின் வாக்கி டாக்கி கருவிகள்…
-
அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் நிறுத்தப்படும்! தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்த்தல் முடிவுகள் அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது வாக்களிப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்கப்படும். அந்தத் தொகுதிகளில் மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடவடிக்கைக்கு பாதிப்பை…
-
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு!
நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் நேற்று (18) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்ததோடு, தேர்தல் நடைபெறும் நேரம் வரையான காலப்பகுதி அமைதி காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் எவ்விதமான பிரச்சார…
-
தேர்தல் முடிவுகளை நேரடி ஒளிபரப்பு தடை!
வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் போது அந்த முடிவுகளை தொலைக்காட்சிகள் அல்லது பெரிய திரைகளை பயன்படுத்தி வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்ப்பது சட்டவிரோதம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதுபோன்ற கூட்டங்களை பாதுகாப்பு தரப்பினர் கலைக்கவோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (19) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக்…
-
கிளிநொச்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 400 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் நியமனம்
கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளுக்காக 400 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(19.09.2024) பிற்பகல் வாக்கெண்ணும் அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றதையடுத்து ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து தொள்ளாயிரத்து ஏழு வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களும்…
-
பதற்றமடைய வேண்டாம் : நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை!!
ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மதத்தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். நாங்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றம். அனைத்து பிரஜைகளும்…