Author: Yalarasan
-
ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தேர்தல் முடிவுகள் மொத்தமாக வெளியானதன் பின்னர் தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் ஞாயிறு மாலை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முதற்கட்டமாக ஊரடங்குச் சட்டத்தை…
-
தமிழர் பகுதியில் திடீரென அமைக்கப்பட்ட இராணுவ வீதி தடை : அச்சத்தில் மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திடீரென வீதியில் இராணுவத்தினர் வீதி தடையை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முல்லைதீவு, புதுக்குடியிருப்பு வீதியில் இராணுவத்தினர் வீதி தடையை புதிதாக அமைத்துள்ளனர். அதேவேளை புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் செல்லும் வீதியில் 10 கிலோமீட்டருக்கு தொலைவில் உடையார் கட்டு பகுதியில் இன்று இரவு இராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். கடந்த காலங்களில் கோவிட் மற்றும் குண்டுவெடிப்பு…
-
வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல்
நாட்டின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தல் இதுவாகும் என பெப்பரல் (PAFRAL) அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் அத்துடன் இம்முறை ஒரு வன்முறைச் சம்பவம் மாத்திரம் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இரண்டு வாக்குச்சீட்டுக் கிழிப்பு சம்பவங்களும், வாக்குச் சீட்டை காணொளி பதிவு செய்த இரண்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம்…
-
மன்னாரில் வாக்கு எண்ணும் நிலையம் நோக்கி பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்படும் வாக்குப் பெட்டிகள்.
மன்னாரில் வாக்கு எண்ணும் நிலையம் நோக்கி பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்படும் வாக்குப் பெட்டிகள். மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் சற்றுமுன் நிறைவடைந்துள்ளது. இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்புகள் மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்புகள் இடம் பெற்றது. -மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாலை 4…
-
முல்லைத்தீவு 62358 பேர் வாக்களித்துள்ளனர் மாவட்டத்தில் 71.76 வீத வாக்குப்பதிவு
முல்லைத்தீவு 62358 பேர் வாக்களித்துள்ளனர் மாவட்டத்தில் 71.76 வீத வாக்குப்பதிவு வன்னித் தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் 71.76 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் செப்ரெம்பர் 21 இன்று 137 வாக்களிப்பு நிலையங்களில் 58,843வாக்குகள், 67.72வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. அதேவேளை தபால் மூல வாக்குகள் 3515 வாக்குகளுடன் மொத்தமாக 62,358வாக்குகள், 71.76வீத வாக்குபதிவு இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரனின் தகவலின் படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 86ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். அத்தோடு முல்லைத்தீவு…
-
2024 ஜனாதிபதி தேர்தல்: மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்குகளின் வீதம் வெளியானது
2024, ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று முற்பகல் 10 மணி நிலவரப்படி பெரும்பாலான மாவட்டங்களில் 20 வீதமாக பதிவாகியுள்ளதாக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி கொழும்பு 20 வீதம், களுத்துறை 32 வீதம், நுவரெலியா 25 வீதம், முல்லைத்தீவு 25 வீதம், வவுனியா 30 வீதம், இரத்தினபுரி 20 வீதம், மன்னார் 29 வீதம், கம்பஹா 25 வீதம், புத்தளம் 23 வீதம், பொலன்னறுவை 35 வீதம் என்ற அளவில் வாக்கு பதிவு…
-
மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்-ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில்.
மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்-ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில். மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள்…
-
மன்னார் மாவட்டத்தில் இதுவரை 34 ஆயிரத்து 913 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன்
மன்னார் மாவட்டத்தில் இதுவரை 34 ஆயிரத்து 913 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தில் மிகவும் சுமூகமான முறையில் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது வரை 34 ஆயிரத்து 913 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை (21) மதியம் 12.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, -மன்னார் மாவட்டத்தில்…
-
முல்லைத்தீவில் 37 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர் வாக்களித்து வருகின்றனர்
முல்லைத்தீவில் 137 வாக்களிப்பு நிலையங்களில் சுமூகமாக இடம் பெற்று வரும் வாக்களிப்பு முல்லைத்தீவில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும்…
-
டியேற்றி மக்கோணால் “தமிழர் மனித உரிமைகள் மையத்தின் – TCHR” சர்வதேச இயங்குனர் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து
“தமிழ் ஜனதிபதி வேட்பாளரின்” முக்கியத்துவம், வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளி யேற்றப்பட வேண்டும் போன்ற விடயங்கள், தற்பொழுது நடைபெறும், ஐ.நா.மனித உரிமை சபையின் 57வது கூட்டத் தொடரில், திருமதி டியேற்றி மக்கோணால், இன்று 20 செப்டம்பர் 2024ல், சர்வதேச சர்வநம்பிக்கை என்ற அமைப்பு சார்பாக ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். டியேற்றி மக்கோணால் “தமிழர் மனித உரிமைகள் மையத்தின் – TCHR” சர்வதேச இயங்குனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.