Author: Yalarasan
-
ராஜபக்சக்கள் மறைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான டொலர்கள்! அநுர தரப்பை சீண்டும் நாமல்
உகண்டாவில் ராஜபக்சக்கள் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படும் கோடிக்கணக்கான டொலர்களை மீட்பதற்காக அரசாங்கத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்க தமது கட்சி தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். உகண்டாவில் நாங்கள் பணத்தை மறைத்து வைத்துள்ளோம் என்று யாரேனும் கூறினால், அந்த பணத்தை நாட்டுக்கு கொண்டு வந்து வெளிநாடுகளின் கடனை அடைத்து விடலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் இருந்து சீஷெல்ஸ் மற்றும் உகண்டாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் பணத்தை…
-
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்திய மேலும் இருவர் கைது
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்தி சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) பிற்பகல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் களனி மற்றும் தெஹிவளை பகுதிகளில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த 03 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27 மற்றும் 41 வயதுடைய அம்பகோட்டே மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இன்று (03) கொழும்பு…
-
24 மணித்தியாலங்களுக்குள் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு பின்னர் நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியானது 300 ரூபாவிற்கும் கீழ் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், இன்றைய தினம் அந்த பெறுமதி மீண்டும் 300 ரூபாவை அடைந்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணயமாற்று விகிதங்களுக்கு அமைவாக அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 291.94 ரூபாவாகவும், 301.16 ரூபாவாகவும்…
-
சிங்கப்பூரில் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு சிறைத்தண்டனை
அதிகாரத்தில் இருக்கும் போது பரிசுப்பொட்களை கையூட்டலாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 62 வயதான ஈஸ்வரன் சுமார் நான்கு லட்சம் சிங்கப்பூர் டாலர்கள் பெறுமதியான பரிசுப் பொருட்களை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஃபோர்மிளா வன் க்ரோன்ப்ரீ மோட்டார் போட்டிகளுக்கான நுழைவு சீட்டுகள், சைக்கிள்கள், மதுபானம் மற்றும் தனியார் ஜெட் பயணம் போன்றவற்றை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் பரிசாக பெற்றுக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த குற்றச்செயல்களுக்காக முன்னாள் அமைச்சர்…
-
குறைக்க வேண்டிய எரிபொருளின் விலை! புதிய அரசாங்கத்திடம் முன்வைக்கப்படும் கேள்வி
தேர்தல் மேடைகளில் எரிபொருளின் விலையை குறைப்போம், மின் கட்டணத்தை குறைப்போம், அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவோம் என கூறினார்கள். இப்போது புதிய அரசாங்கம் ஒன்று அமையப் பெற்றுள்ளது. அப்படியானால் தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகள் எங்கே என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் வைத்து நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒக்டேன் 92 ஒரு லீட்டர் துறைமுகத்திற்கு வந்திறங்கும் போது…
-
IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்!
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதன்படி, நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4-ஆம் திகதி வரை நாட்டில் தங்க உள்ளனர். அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர். இந்த விஜயத்தின் போது, இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்…
-
ரூபவாஹினி மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய திட்டங்கள் விரைவில்
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி யாமோடா டெட்சூயா (YAMADA TETSUYA) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தனர். ஜயிக்கா நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் தொலைக்காட்சி ஔிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஜயிக்கா (JICA) நிறுவனத்தின்…
-
அநுரவின் அடுத்தக் கட்ட நகர்வுகள்! தமிழர்களிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அநுர குமார திஸாநாயக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களை இலகுவாகச் சென்றடைவதன் காரணமாக தேசிய மக்கள் சக்தி மீதும், ஜனாதிபதி மீதுமான நம்பிக்கை பொதுமக்களிடத்தில் வலுத்து வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஐன்ஸ்டின் தெரிவித்தார். ஊடககங்களுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் அவர்கள் சார்ந்திருந்த கட்சியின் தலைவர்களது வழிகாட்டலின் கீழ் தங்களது வாக்குகளை…
-
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.18 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது இதேவேளை, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.98 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.90 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.