Tag: #srilankannews

  • யாழில். குட்டையில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு!

    யாழில். குட்டையில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு!

    யாழ்ப்பாணத்தில் நீர் குட்டை ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளனர்.   ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய நிரோசன் விதுசா மற்றும்  5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா ஆகிய இரு சிறுமிகளுமே உயிரிழந்துள்ளனர். குறித்த இரு சிறுமிகளும் வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றுள்ளனர். கடைக்கு சென்ற இருவரையும் காணவில்லை என உறவினர்கள் தேடிய போது கடைக்கு சற்று தொலைவில் உள்ள குட்டைக்குள் இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளனர்.…

  • யாழ்.இளைஞனிடம் மோசடியில் ஈடுபட்ட நீர்கொழும்பு மதபோதகர் கைது!

    யாழ்.இளைஞனிடம் மோசடியில் ஈடுபட்ட நீர்கொழும்பு மதபோதகர் கைது!

    யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 15 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் , நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 15 இலட்ச ரூபாய் பணத்தினை மத போதகர் பெற்றுள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் வெளிநாட்டு பயணம் சரி வராததால் , கொடுத்த பணத்தினை இளைஞன் திருப்பி கேட்ட போது , போதகர்…

  • ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு!

    ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு!

    செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபையால் நடாத்தப்பட்ட  இளைய  தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் இடம்பெற்றது.   இந் நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார் அவர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில்  வைத்தியத் துறைக்கு அரும்பணியாற்றிய…

  • யாழில். முச்சக்கர வண்டிக்குள் இருந்த கைபேசி திருட்டு – இருவர் கைது!

    யாழில். முச்சக்கர வண்டிக்குள் இருந்த கைபேசி திருட்டு – இருவர் கைது!

    யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் ஒருவரும் , அதனை வாங்கிய நபர் ஒருவருமாக இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்   யாழ், நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியினுள் பூட்டி பாதுகாப்பாக வைத்திருந்த சுமார் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசியை , துவிச்சக்கர வண்டி ஒன்றில் வந்த நபர் ஒருவர் களவாடி சென்று இருந்தார். கையடக்க தொலைபேசி களவாடப்பட்டமை தொடர்பில்…

  • அச்சுவேலியில் வீடொன்றுக்கு தீ வைப்பு – 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அட்டகாசம்!

    அச்சுவேலியில் வீடொன்றுக்கு தீ வைப்பு – 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அட்டகாசம்!

    யாழ்ப்பாணத்தில் 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல் ஒன்று பண்ணை வீடொன்றின் மீது, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதலை மேற்கொண்டு , தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.   அச்சுவேலி , கைத்தொழில் பேட்டையில் உள்ள பண்ணை ஒன்றினுள் காணப்பட்ட வீடொன்றின் மீதே குறித்த வன்முறை கும்பல் தாக்குலை மேற்கொண்டுள்ளது. குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞன் மீது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை…

  • படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல்!

    படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல்!

    படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது   யாழ்ப்பாணம் பிரதான வீதி, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பொது நினைவுத்தூபியில் இவ் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுருவபடத்திற்கு, உதயன் குழும தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவனால்…

  • கவுணாவத்தை வைரவர் ஆலய வேள்வி !

    கவுணாவத்தை வைரவர் ஆலய வேள்வி !

    யாழ்ப்பாணம் கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இன்றைய வேள்வியில் நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டன. வேள்வியை முன்னிட்டு, நேற்றைய தினம்வெள்ளிக்கிழமை இரவு, வேள்வி ஆடுகளை வளர்த்தவர்கள் அவற்றை பொதுமக்களுக்கு காட்சி படுத்தி , அதிகாலை வேளை ஆலயத்திற்கு ஆடுகளை கொண்டு சென்று ,  பொங்கல் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன. வெளிநபர்கள் ஆடுகள் பலி கொடுக்கப்படுவதை பார்க்க முடியாதவாறு ஆலய வாயிலில் பாதுகாப்பான கூடம் அமைக்கப்பட்டு…

  • யாழில் கணவன் – மனைவி மீது தாக்குதல் – நகைகள், பணம் என்பவை கொள்ளை!

    யாழில் கணவன் – மனைவி மீது தாக்குதல் – நகைகள், பணம் என்பவை கொள்ளை!

    வியாபார நடவடிக்கைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய வர்த்தகரை , வீட்டிற்கு அருகில் வைத்து தாக்கி ஒரு தொகை பணத்தை கொள்ளையிட்டதுடன் , வர்த்தகரின் மனைவியை தாக்கி அவரது நகைகளையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்   யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற இச் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குணசிங்கம் சந்துரு என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் குறித்த நபர் தனது வியாபாரங்களை முடித்துக்கொண்டு , வீடு திரும்பிய வேளை…

  • பொது நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் நிறைவு!

    பொது நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் நிறைவு!

    தென்கிழக்காசியாவின் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு.   தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் யாழ் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சிவகரன் அனுசியா ,நூலக ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதன்போது நூலகம் எரிக்கப்பட்டபோதும்…

  • நான் பொது வேட்பாளருக்கு மாறானவன்!

    நான் பொது வேட்பாளருக்கு மாறானவன்!

    மக்களை உசுப்பேத்தி எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால் , அது நடக்காது. மக்கள் தங்களுக்கு எது சரி என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். சரியென்றால் ஏற்றுக் கொள்வார்கள் இல்லையென்றால் விலக்கி வைப்பார்கள் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி, வி கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.   யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். நான் பொது வேட்பாளருக்கு மாறானவன். பொது வேட்பாளர் தேவையற்றது என அரசியல்வாதிகளுக்குள்ளேயே முதன் முதலில்…