Tag: #srilankannews

  • நெடுந்தீவு இளைஞனின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம்!

    நெடுந்தீவு இளைஞனின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம்!

    நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   நெடுந்தீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையின் பின் நேற்று இரவு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று இறுதி கிரிகைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர்  நல்லடக்கத்திற்காக சேமக்காலைககு எடுத்துச் செல்லும் போது மக்கள் சடலத்தையும் தோள்களில் சுமந்தவாறு நெடுந்தீவு…

  • தண்ணீ பவுசர் பொலிஸ் நிலையத்தில் ; காரைநகர் மக்கள் குடிநீருக்கு அல்லல்!

    தண்ணீ பவுசர் பொலிஸ் நிலையத்தில் ; காரைநகர் மக்கள் குடிநீருக்கு அல்லல்!

    யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய தண்ணீர் பவுசரை பொலிஸார் தடுத்து வைத்திருப்பதனால் , காரைநகர் பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டு வருகின்றனர்.   காரைநகர் பிரதேச சபைக்கு சொந்தமான தண்ணீர் பவுசர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது , கல்லுண்டாய் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் விபத்துக்கு உள்ளானது. விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் விபத்துக்கு…

  • வடக்கில் கனமழைக்கு வாய்ப்பு!

    வடக்கில் கனமழைக்கு வாய்ப்பு!

    வடமாகாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் கனமழையுடனான காலநிலை நிலவும் என வானிலையாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.   தென்மேற்கு பருவக்காற்று மழையின் இரண்டாவது சுற்று  தற்போது ஆரம்பமாகியுள்ளதால், கொழும்பு, களுத்துறை, காலி, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்கள் அடுத்து வரும் ஏழு நாள்களுக்கு கனமழை பெறும் வாய்ப்புள்ளதுடன். இம் மாவட்டங்களின் சில பிரதேசங்கள் வெள்ள இடர்களுக்கு உட்பட வாய்ப்புள்ளது. அடுத்த வாரமளவில் மத்திய வங்காள விரிகுடாவில்…

  • யாழில். ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம்!

    யாழில். ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம்!

    யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் நடாத்தி வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது   யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில்  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட…

  • யாழ். ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் ; கைதான மூவரும் பிணையில் விடுதலை!

    யாழ். ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் ; கைதான மூவரும் பிணையில் விடுதலை!

    யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.  அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில்  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது. இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ…

  • வவுனியாவில் நில அதிர்வு!

    வவுனியாவில் நில அதிர்வு!

    வவுனியாவை அண்மித்து நேற்றிரவு(18), 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவானது என புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. வவுனியாவின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • யாழ்.இந்திய துணைதூதரகம் முற்றுகை!

    யாழ்.இந்திய துணைதூதரகம் முற்றுகை!

    இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு கோரி, யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகம்  முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டம் காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் மருதடி வீதி ஊடான போக்குவரத்தை பொலிஸார் தடை செய்து, வீதியின் குறுக்கே வீதி தடைகளை போட்டு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர்

  • கிளிநொச்சி நெத்தலியாற்றில் இருந்து சடலம் மீட்பு!

    கிளிநொச்சி நெத்தலியாற்றில் இருந்து சடலம் மீட்பு!

    கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் இருந்து  சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலத்தில் அடிகாயங்களும் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

  • யாழில், நான்கு தமிழக கடற்தொழிலாளர்கள் கைது!

    யாழில், நான்கு தமிழக கடற்தொழிலாளர்கள் கைது!

    இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

  • ஊடகவியலாளர் மீதான தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள்!

    ஊடகவியலாளர் மீதான தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள்!

    யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதலுக்குள்ளாகி மூன்று தினங்களாகியும் இதுவரை எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள் உள்ளதென தெரிவித்தார்.   அச்சுவேலியில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளரின் இல்லத்தை இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை  பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதனை தெரிவித்தார். நீண்டகாலத்திற்கு பின்னர் ஊடகவியலாளரை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் கடந்த 13 ம்…