Tag: #srilankannews

  • யாழில். கடற்படையினருக்கு காணி சுவீகரிக்க முயற்சி – மக்களின் எதிர்ப்பால் அளவீட்டு பணி நிறுத்தம்!

    யாழில். கடற்படையினருக்கு காணி சுவீகரிக்க முயற்சி – மக்களின் எதிர்ப்பால் அளவீட்டு பணி நிறுத்தம்!

    யாழ்ப்பாணத்தில் கடற்படை முகாமிற்காக காணி சுவீகரிப்பதற்கான நில அளவை பணிகள் மக்கள் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள 04 பரப்பு தனியார் காணியினை கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, அதன் ஒரு கட்டமாக இன்றைய தினம் வியாழக்கிழமை குறித்த காணியினை நில அளவை செய்வதற்காக நில அளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் காணிக்கு வருகை தந்த போது , அங்கு கூடியிருந்த மக்களின் எதிர்ப்பினால் அவர்கள் காணி அளவீட்டு பணிகளை…

  • புத்தகப்பையில் கசிப்பு கடத்தி வந்தவர் யாழில் கைது!

    புத்தகப்பையில் கசிப்பு கடத்தி வந்தவர் யாழில் கைது!

    கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பையில் கசிப்பு பொதிகளை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 லீட்டர் கசிப்பினை மூன்று புத்தகப்பைகளில் கடத்தி வந்த 25 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் பேருந்தில் கசிப்பு கடத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலே இளைஞனை கைது செய்துள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • யாழில். காணி சுவீகரிப்பு முயற்சிகளை நிறுத்தமாறு அறிவுறுத்தல்!

    யாழில். காணி சுவீகரிப்பு முயற்சிகளை நிறுத்தமாறு அறிவுறுத்தல்!

    படைத் தரப்பினருக்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்கிலான அனைத்து காணி அளவீடுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. பொன்னலை, திருவடி நிலை பகுதியில் தனியார் காணியில் நிலை கொண்டிருக்கும் கடற்படையினருக்கு குறித்த காணியை சட்ட ரீதியாக வழங்குவதற்கான அளவீட்டு பணிகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள்…

  • ஜூன் மாத நடுப்பகுதியில் யாழுக்கு குடிநீர்!

    ஜூன் மாத நடுப்பகுதியில் யாழுக்கு குடிநீர்!

    யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்தின் ஆரம்ப பணிகள் ஜூன் மாத நடுப்பகுதியில் முற்றுப்பெறும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை பிரதானமாக காணப்படுகிறது அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜூன் மாத நடுப்பகுதியில் குடிநீர் விநியோகத்திற்கான ஆரம்ப பணிகள் முற்று பெறும் என நம்புகிறேன் என தெரிவித்தார் .

  • பொது வேட்பாளர் விடயத்தை சுமந்திரன் குழப்புகிறார்!

    பொது வேட்பாளர் விடயத்தை சுமந்திரன் குழப்புகிறார்!

    ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் இடம்பெற்றுவரும் முன்னெடுப்புக்களை சுமந்திரன் குழப்பியடிக்கின்றார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.   யாழில். இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ் பொது வேட்பாளர் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வு நடைபெறவுள்ளமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான இந்தக் கூட்டத்துக்கு…

  • வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

    வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

    வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்,   வவுனியா குருமன்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கை ஒன்றின் போது, இளைஞர் ஒருவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வியாபார நோக்கில் குறித்த போதை மாத்திரைகளை வவுனியா, குருமன்காடு பகுதிக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே கைது…

  • யாழில். மாணவிகளை தாக்கிய குற்றத்தில் கைதான அருட்சகோதரிக்கு பிணை!

    யாழில். மாணவிகளை தாக்கிய குற்றத்தில் கைதான அருட்சகோதரிக்கு பிணை!

    யாழில்.மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.   ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி அடித்து துன்புறுத்தியதாக கூறி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்த மாணவிகள் 11 பேர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அதனை அடுத்து மாணவிகளை யாழ்,போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்திய வேளை மாணவிகளின் உடலில் தழும்புகள் இருந்தமை கண்டறியப்பட்டது. அது…

  • யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர் விளக்கமறியலில்!

    யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர் விளக்கமறியலில்!

    யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து , ஊழியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதானவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.   கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணியாலில் கையில் காயமடைந்த நபர் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு , அத்துமீறி வைத்தியசாலை வளாகத்தினுள் நுழைந்து, வைத்தியசாலை கட்டடத்திற்குள் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்று அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில் , காயமடைந்த நபரை இறக்கி விட்டுள்ளார். அதன் போது…

  • முல்லைத்தீவில் 14 வயது மாணவி கர்ப்பம் – கடை உரிமையாளர் கைது!

    முல்லைத்தீவில் 14 வயது மாணவி கர்ப்பம் – கடை உரிமையாளர் கைது!

    முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவி நாள்தோறும் சந்தேக நபரின் கடைக்குச் சென்று வந்துள்ள நிலையில், சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில், மாணவி கர்ப்பம் தரித்திருப்பது வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மாணவி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட  சட்ட வைத்திய விசாரணைகளின் அடிப்படையில்…

  • யாழ்.மாவட்ட பதிவாளர் நாயக திணைக்கள ஒரு நாள் சேவைகள் நிறுத்தம்!

    யாழ்.மாவட்ட பதிவாளர் நாயக திணைக்கள ஒரு நாள் சேவைகள் நிறுத்தம்!

    யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் நாயக திணைக்களத்தில் பிரதியாக்க இயந்திரங்கள் (போட்டோ கொப்பி) பழுதடைந்துள்ளமையால் சேவை பெற செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.   இயந்திரங்கள் பழுந்தடைந்துள்ள காரணத்தால், திணைக்களத்தில் காணிகளுக்கான தோம்பு மற்றும் உறுதி பிரதிகளை வழங்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. விற்பனைக்கு பிந்திய சேவையில் திருப்தியின்மை.  இயந்திரங்களை விற்பனை செய்த நிறுவனங்களே விற்பனைக்கு பிந்திய சேவைகளை வழங்குவதானல். அவர்களே பழுதுகளை சரி செய்ய ஊழியர்களை அனுப்பி வைப்பார்கள். இயந்திரங்கள் பழுந்தடைந்தமை தொடர்பில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும்…