Tag: #chilapam#eelamurasu#srilankanews
-
சிலாபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வௌியான தகவல்
சிலாபம், சிங்கபுர பகுதியில் இரண்டு மாடி வீட்டில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மரணங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (21) நடைபெற்றது. இறந்த பெண்ணையும், அவரது மகளையும் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, பின்னர் உடல்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டமை தெரியவந்தது. சிலாபம் பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி ஐ.எம். இளங்கரத்ன பண்டா இன்று (21) பிற்பகல் சிலாபம் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த பெண் மற்றும் மகளின் சடலங்களின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.…