Category: கனடா செய்திகள்

  • கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்!

    கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்!

    கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆட்குறைப்பு குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும், பிரதிப் பிரதமருமான கிறிஸ்டியா ப்ரிலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். செலவுகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பதவி விலகல்கள் மற்றும் ஓய்வு பெறுதல்கள் போன்ற சந்தர்ப்பங்களில் புதிதாக…

  • பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

    பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

    ஒன்றாரியோ மாகாணத்தில் ரயிலில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மாகாண முதல்வர் டக் போர்ட் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.GO Transit போக்குவரத்து சேவை வாரந்தம் 300 புதிய ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் இவ்வாறு ரயில் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டின் பின்னர் மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அதி கூடிய போக்குவரத்துப் பயணங்கள் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

  • கனடாவில் பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது

    கனடாவில் பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது

    கனடாவில் பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கனடாவின் ஹாலிபெக்ஸ் பகுதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹொலிஸ் வீதி மற்றும் டெர்மினால் வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதிப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய 21 பேரை ஹாலிபெக்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். போராட்ட இடத்திலிருந்து கலைந்து செல்லுமாறு பொலிஸார் விடுத்த அறிவுறுத்தலை ஏற்க மறுத்த காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக…

  • கனடாவில் கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான அறிவிப்பு!

    கனடாவில் கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான அறிவிப்பு!

    கனடாவில் (Canada) ஐ-போன் (iphone) பயன்படுத்துபவர்கள் நட்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6  (iphone 6) மற்றும் ஐ-போன் 7 (iphone 7) ஆகியவற்றை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு 150 டொலர்கள் வரையில் நட்டஈடு பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தீர்ப்பானது பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.

  • சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ள கனடா!

    சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ள கனடா!

    கனடாவின்(Canada) உள்ளக அரசியல் விவகாரங்களில் சீனா தலையிடுவதாக ட்ரூடோ(Justin Trudeau) அரசு நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானை தங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டிவந்த கனடா, தனது குற்றச்சாட்டை சீனாவின் பக்கம் திருப்பியுள்ளது. கனடாவின் உளவுத்துறை முகவர்கள், 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில் தலையிட்டிருக்கக்கூடும் என முதலில் இந்தியா மீதும் பின்னர் பாகிஸ்தான் மீதும் குற்றம் சுமத்தியுள்ளது.

  • புலம்பெயர்ந்தோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

    புலம்பெயர்ந்தோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

    கனடா நாட்டின் சட்டதிட்டங்களை மீறும் புலம்பெயர்ந்தோர் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர் என கனேடிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வசிக்கும் ஒரு குடியேற்றவாசி கனேடிய சமூகம் ஏற்றுக்கொள்ளாத நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான அதிகாரம் கனேடிய அரசாங்கத்துக்கு உள்ளது. இவ்வாறு கனடாவிலிருந்து புலம்பெயர்ந்த ஒருவரை வெளியேற்றக்கூடிய காரணிகளை கண்டறிவது ஒவ்வொரு குடியேற்றவாசிக்கும் முக்கியமானது ஆகும்.

  • கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது!

    கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது!

    கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

  • கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

    கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

    கனடாவில் (canada) 2024ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல், குறிப்பிட்ட நிரந்தரக் குடியிருப்பு (PR) கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அறிவித்துள்ளது.கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி(IRPR) இந்த கட்டண உயர்வு அறிமுகப்படுத்தப்படுவதாக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிப்பவர் மற்றும் அவரது கணவன் அல்லது மனைவிக்கான கட்டணம் 515 கனேடிய டொலர்களிலிருந்து 575 டொலர்களாக உயர…

  • கைதான விமானப் பணிப்பெண் !

    கைதான விமானப் பணிப்பெண் !

    பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் கனடாவின் ரொறொன்ரோவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் விமானத்தில் இருந்து வந்த ஹினா சானி என்ற விமானப் பணிப்பெண்ணின் பயணப்பொதியில் பல்வேறு நபர்களின் கடவுச்சீட்டுகள் இருந்ததைக் கண்டு ரொறன்ரோவில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, பாகிஸ்தான் ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

  • படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு நீதிமன்றின் உத்தரவு !

    படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு நீதிமன்றின் உத்தரவு !

    ஆறு இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஆறாம் திகதி கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையை சேர்ந்த தாயும், அவரது நான்கு குழந்தைகளும் மற்றுமொரு இலங்கையரும் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம்(29) ஒட்டாவாவில் உள்ள நீதிமன்றத்தில் தொலைபேசி மூலமான காணொளி ஊடாக சந்தேகநபர் முன்னிலையான போது ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும்…