Category: உலக செய்திகள்
-
19 பேருடன் பயணித்த விமானம்நேபாளத்தில் விபத்து; பயணிகள் என்ன நிலை?
நேபாளத்தில் 19 பேருன் பயணித்த சவுரியா ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானம் புறப்படுகையில் ஓடுபாதையில் சறுக்கி விபத்துகுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. நேபாளத்தில் 19 பேருடன் பயணித்த விமானம் விபத்து; பயணிகள் நிலை என்ன? நேபாளத்தில் 19 பேருன் பயணித்த சவுரியா ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானம் புறப்படுகையில் ஓடுபாதையில் சறுக்கி விபத்துகுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. நேபாளத்தில் 19 பேருடன் பயணித்த விமானம் விபத்து; பயணிகள் நிலை என்ன? | Plane Crashes In Nepal With 19 On Board…
-
சீனாவில் பிரபல பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உயிரை மாய்த்துள்ளார்
சீனாவை சேர்ந்த பிரபல யூடியூப் இன்ப்லூயன்சர் பான் சியோட்டிங் என்ற 24 வயதான இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர், தான் சாப்பிடும் வகை வகையான உணவுகளை யூடியூபில் வீடியோவால் வெளியிடுவார். பலமுறை உணவு சாப்பிடும் சவால்களையும் செய்துள்ளார். இதனால் அவர் பிரபலமடைந்தார். இந்நிலையில், பான் சியோட்டிங் தொடர்ந்து 10 மணி நேரம் உணவு சாப்பிடும் சவாலை எதிர்க்கொண்டார். ஒரு வேளைக்கு 10 கிலோ உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார் பான் சியோட்டிங்கை, அவரது பெற்றோர் மற்றும் நலம்…
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கமலா ஹரிஸ்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ள ஜோபைடன், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹரிசினை அறிவித்துள்ளார். இந்த வருடம் எங்கள் கட்சியின் வேட்பாளராக கமலா வருவதற்கு நான் எனது முழு ஆதரவையும் ஒப்புதலையும் வழங்கவிரும்புகின்றேன் என பைடன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயக கட்சியினரே ஒன்றிணைந்து டிரம்பினை தோற்கடிக்கவேண்டிய நேரம் இது இதனை செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
-
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை பெற்ற தர்ஷன் செல்வராஜா!
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் என்ற பெருமையை பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழரான வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா பெற்றுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பரிஸில் நடைபெறுகிறது. தர்ஷன் செல்வராஜாவிடம் ஒலிம்பிக் தீபம் நேற்று முன் தினம் (15) வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் அதை ஏந்தி 2.5 2.5 கிலோமீற்றர் வலம் வந்துள்ளார். ஒலிம்பிக் தொடக்க விழா தொடங்குவதற்கு முன்னதாக ஒலிம்பிக் ஜோதியானது, மார்சேயில் தொடங்கி பிரான்ஸின் பல்வேறு நகரங்கள் வழியாக ஒலிம்பிக்…
-
டொனால்ட் ட்ரம்ப் துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் தப்பினார்
அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்கு முன் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலையை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் தோட்டா காதடியால் சிராய்த்துக் கொண்டு சென்றதால் ட்ரம்ப் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு காதடியில் பட்டதும் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றிக் கொண்டு நின்ற இடத்திலேயே அமர்ந்துவிட்டார் . அதன்பின்னர் அவருடைய…
-
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்க ஜனாதிபதி உறுதி
உக்ரைனுக்கு மேலும், ஆயுதங்களை வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் 75 ஆவது ஆண்டு விழாவையொட்டி, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு நேற்று ஆரம்பமானது. இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் ஜனாதிபதி வொளாடிமிர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றிருந்தார். இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றுகையில், எதிர்வரும் மாதங்களில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு அதிகளவான…
-
ஜெர்மனியில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு அதிக தாமதம்
ஜேர்மனியில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு வழக்கத்தைவிட அதிக தாமதம் ஏற்படுவதால், சுற்றுலா செல்லும் திட்டத்திலிருப்போர் விரக்தியடைந்துள்ளார்கள். வழக்கமாக, பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், தற்போது இரண்டு மாதங்கள் ஆவதாக ஜேர்மன் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இப்படி பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு தாமதம் ஏற்படுவதற்குக் காரணம், தேசிய அச்சடிப்பு சேவைதான் என்று பாஸ்போர்ட் அலுவலக மூத்த அதிகாரியான Helmut Dedy என்பவர் தெரிவித்துள்ளார். அவர்களுடைய தவறுக்கு, தங்கள் அலுவலக ஊழியர்கள் மக்களுடைய கோபத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…
-
பிரான்ஸ் பிரதமரின் ராஜினாமாவை நிராகரித்த ஜனாதிபதி மேக்ரான்!
பிரான்ஸ் நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மையைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து, பிரதமர் கேப்ரியல் அட்டலின் Gabriel Attal ராஜினாமாவை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் நிராகரித்ததாக அந்நாட்டு செய்தி சேனல் தெரிவித்துள்ளது. பிரான்ஸின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக “தற்போதைக்கு” பிரதம மந்திரியாக இருக்குமாறு கேப்ரியல் அட்டலை மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார் என்று ஜனாதிபதி அலுவலகமான எலிஸீயை மேற்கோள் காட்டி குறித்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய…
-
ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு
ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று காலை 5.02 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பில் விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது
-
ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஸ்காப்ரோவின் வோர்டன் அவன்யூவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபர் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது