Category: உலக செய்திகள்

  • தீடிரென விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்! 21 பேருக்கு நேர்ந்த நிலை?

    பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இஸ்லாமாபாத் நகரில் இன்று காலை 11.15 மணியளவில் மி-8எம்.டி.வி.-1 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு ஷீவா நகர் நோக்கி சென்றுள்ளது. இதன்பின்பு, மதியம் 1.15 மணியளவில் ஹெலிகாப்டரிலிருந்த பயணிகளில் ஒருவர் இறங்கியுள்ளார். இதன்பின்பு பன்னு நகர் நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது, திடீரென அதன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஹெலிகாப்டரை மீண்டும் ஷீவா…

  • சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

    சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.18 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது இதேவேளை, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.98 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.90 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • டியேற்றி மக்கோணால் “தமிழர் மனித உரிமைகள் மையத்தின் – TCHR” சர்வதேச இயங்குனர் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து

    “தமிழ் ஜனதிபதி வேட்பாளரின்” முக்கியத்துவம், வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளி யேற்றப்பட வேண்டும் போன்ற விடயங்கள், தற்பொழுது நடைபெறும், ஐ.நா.மனித உரிமை சபையின் 57வது கூட்டத் தொடரில், திருமதி டியேற்றி மக்கோணால், இன்று 20 செப்டம்பர் 2024ல், சர்வதேச சர்வநம்பிக்கை என்ற அமைப்பு சார்பாக ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். டியேற்றி மக்கோணால் “தமிழர் மனித உரிமைகள் மையத்தின் – TCHR” சர்வதேச இயங்குனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

  • லெபனானில் வெடித்து சிதறிய பேஜர்கள் வாக்கி டாக்கிகள்; கத்தார் ஏர்வேஸ் அதிரடி அறிவிப்பு!

    லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையத்தில் பயணம் செய்யும் மக்கள் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்ததுடன் 3000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். லெபனான் தெற்கு பகுதிகளிலும், தலைநகர் பெய்ரூட்டின் பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லாவினரின் வாக்கி டாக்கி கருவிகள்…

  • இஸ்ரேல் மீது சரமாரியாக எவுகணைகளை வீசிய ஹிஸ்புல்லா அமைப்பு!

    லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறித்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறான நிலையில், வடக்கு இஸ்ரேலில் உள்ள ஷபத் நகரம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்துள்ளது. இது தொடர்பில் இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, லெபனானிலிருந்து இஸ்ரேல் நகரம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. முதலில் சுமார் 20 ஏவுகணை வீசப்பட்டன. 30…

  • ஆளில்லா விமானம் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தும் ரஷ்யா

    உக்ரைன் மீது ரஷ்யா ஆளில்லா விமானம் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் 12 தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் 76 ஆளில்லா விமான தாக்குதல்களில் 72 ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது இந்த தாக்குதல்களால் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், ரஷ்யாவின் இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. உக்ரைன் ஜனாதிபதி இம்மாத…

  • அமெரிக்க தேர்தல் வரலாற்றில் கமலா ஹரிஸ் செய்த புதிய சாதனை

    அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் தேர்தல் பிரசாரத்திற்காக, கடந்த ஒரு மாதத்தில் ரூ.4,528 கோடி நிதி திரட்டி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸ் போட்டியிடுவதுடன், குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம்…

  • இலங்கையர்கள் உள்ளிட்டவர்களுடன் பிரித்தானியா நோக்கி சென்ற படகு கடலில் மூழ்கி விபத்து – ஒருவர் மரணம்

    பிரித்தானியா நோக்கி சென்ற சொகுசு படகொன்று கடலில் மூழ்கி விபத்துள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த படகில் இலங்கையர்கள் உட்பட 22 வெளிநாட்டவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தின் போது, படகில் பயணித்த பிரித்தானியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் உட்பட 06 பேர் காணாமல் போயுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

  • லெபனானில் இருந்து விரைவில் வெளியேறுங்கள்; அவுஸ்திரேலியா அறிவிப்பு

    அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவும் பிரிட்டனும் தங்கள் நாட்டு மக்களிடம் இதே கோரிக்கையை விடுத்துள்ளன. இந்நிலையில் சுமார் 15,000 அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 500,000 பேர் ஆஸ்திரேலியாவில் வசிப்பதாக தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.இது தொடர்பில் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு…

  • பிரான்ஸில். கலங்கும் குடும்பம் ஈழத் தமிழ் இளைஞனின் விபரீத முடிவு

    பிரான்ஸில் கிளிநொச்சி இளைஞன் காதலியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் கிளிநொச்சி – உருத்திரபுரத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நான்கு வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டிக்கு புலம் பெயர்ந்துள்ளார் பிரான்ஸில் ஈழத் தமிழ் இளைஞனின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம் பிரான்ஸில் கிளிநொச்சி இளைஞன் காதலியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் கிளிநொச்சி – உருத்திரபுரத்தை…