Author: Yalarasan
-
அமெரிக்காவில் வெற்றி கொண்டாட நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு! 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் உள்ள மிசிசிபி மாகாணம், ஹொல்மெஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹொல்மெஸ் நகரில் பாடசாலைகளுக்கு இடையே நடைப்பெற்ற கால்பந்து போட்டியில் அப்பகுதியை சேர்ந்த பாடசாலை சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, இந்த வெற்றியை கொண்டாட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த நிகழ்ச்சி இன்றையதினம் நடைபெற்ற நிலையில அப்போது அங்கு அந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தபோது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.…
-
மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3 பிள்ளைகளின் தயாரான வி.விஜயராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த பெண்ணிற்கு எற்பட்டுள்ள சக்கரை வியாதி காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சம்பவதினமான இன்று பிற்பகல் வீட்டின் முற்றத்தில் தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்ததையடுத்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார்…
-
நாட்டில் இடம்பெற்ற அகிம்சைப் போராட்டம், 30 வருட ஆயுதப் போராட்டமும் எதற்காக ஏற்பட்டதோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது- அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்-மன்னார் ஆயர்.
நாட்டில் இடம்பெற்ற அகிம்சைப் போராட்டம், 30 வருட ஆயுதப் போராட்டமும் எதற்காக ஏற்பட்டதோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது- அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்-மன்னார் ஆயர். (20-10-2024) நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் அவற்றை மட்டும் கருத்திற் கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்க கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க…
-
பிரபல உணவகத்தில் குடிநீரை அருந்திய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கொழும்பு, கொத்தடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உணவு அருந்திய பின்னர் குடிநீர் போத்தலில் உள்ள நீரை குடித்த யுவதி நோய்வாய்ப்பட்டுள்ளார். குறித்த யுவதி 250 மில்லி குடிநீர் போத்தலில் இருந்த குடிநீரை அருந்தியதாகவும், அதன் போது தொண்டையில் கடுமையான அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவர் குடித்த தண்ணீரை வாந்தி எடுத்ததாகவும், தொண்டையில் எரிவது போல் உணர்ந்ததாகவும் அவர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், surgical spirit இருந்ததாக கூறப்படும் குடிநீர் போத்தல் பொலிஸாரால்…
-
கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் குடியிருப்புகளில் மறைக்கப்பட்டுள்ள இரகசியங்கள்
கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் குடியிருப்புகளில் மறைக்கப்பட்டுள்ள இரகசியங்கள் கொழும்பு 07 இல் அமைந்துள்ள 34 அமைச்சர் குடியிருப்புகளில் 29 வீடுகளின் சாவிகள் அரச பொது நிர்வாக அமைச்சிடம் கையளிக்கப்படவில்லை என்பதுடன், அந்த குடியிருப்புகளில் உள்ள பொருட்கள் தொடர்பில் அமைச்சிடம் எவ்வித தகவலும் இல்லை என தெரியவந்துள்ளது. இதுவரை காலமும் இந்த குடியிருப்புகளில் இருந்த அமைச்சர்கள் உரிய சாவியை அந்த குடியிருப்புக்கு வரும் அடுத்த அமைச்சரிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் அமைச்சர்கள், தாம் பதவி…
-
அநுரவின் முடிவினால் சர்வதேசம் அதிர்ச்சி
கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பியினரால் ஒருபோதும் தமிழ் மக்கள் எந்தவித தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினால் வழமைப்போன்று தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுவர் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, அநுர குமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களுக்கான பல வாய்ப்புகளை எதிர்ப்பதற்கும், முறிப்பதற்கும்,தடுப்பதற்கும் தீவிரமாக செயற்பட்டவர். யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பியினர் இன்று வரையில் மாறாமல் அவ்வாறே தமிழர்களுக்கு…
-
இத்தாலியில் வாகன விபத்தில் இலங்கை இளைஞன் பலி
இத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த அகில பெர்னாண்டோ என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வெளிநாட்டவர் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் கார் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த நிலையில், மீண்டும் இத்தாலிக்கு சென்ற சில நாட்களில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
-
இருளில் மூழ்கிய கியூபா; ஒரு கோடி பேர் பாதிப்பு!
கியூபாவில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டால் சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கியூபாவின் மிகப்பெரிய மின் நிலையங்களில் ஒன்று செயலிழந்ததையடுத்து மின்சாரத்தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மின் பற்றாக்குறையை சமாளிக்க பாடசாலைகள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் ஒரு சில அரசு அலுவலகங்களை தற்காலிகமாக மூடுமாறு கியூபா அரசு உத்தரவிட்டுள்ளது. அதேவேளை அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடால் கியூபா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
-
யாழ். தனியார் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜா
உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று(19.10.2024) மாலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்ப்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் எமது ஊடகம் அவரது உறவினர்களை தொடர்புகொண்டு கேட்டப்போது சிகிச்சையின் பின்னர் தற்போது அவரது உடல்நிலை சீராகிவருவதாக உறுதிப்படுத்தப்பட்டது.
-
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் – நீதியின்றி 24 வருடங்கள்
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் – நீதியின்றி 24 வருடங்கள் தமிழ் ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 24 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனாலும், நீதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது. அவரது படுகொலை, இன்னும் பல படுகொலைகளுடன் சேர்ந்து, தீர்க்கப்படாமல் உள்ளமை, இலங்கையில் தொடரும் தண்டனையின்மை கலாச்சாரத்தை நிலைநிறுத்துகிறது; இது குற்றவாளிகள் பின்விளைவுகளுக்கு பயப்படாமல் செயல்பட அனுமதிக்கிறது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் புதிய அரசாங்கம், ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் கொலை செய்யப்பட்டமை உட்பட பல உயர்மட்ட வழக்குகளை மீள…