Author: Yalarasan

  • ஐ.எம்.எப் இன் மிகைக்கட்டண நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை

    கடனளிப்பவர்கள் தரப்புக்களுடன் மேற்கொள்ளப்பட்ட கடன் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தவுடன், சர்வதேச நாணய நிதியத்தின் மிகைக்கட்டண (surcharge) நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியம், அண்மையில் இதற்கான ஒருமித்த கருத்தை எட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய மிகைக்கட்டணங்களை எதிர்கொள்ளும் 22 கடன்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் கடந்த ஆண்டு இணைக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் தற்போது கடன் வாங்கும் 52 உறுப்பு நாடுகளில்,…

  • பொதுத்தேர்தலுக்கான 21ஆயிரம் அஞ்சல் மூல வாக்குகள் நிராகரிப்பு

    2024 பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் மொத்தம் 21,160 அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 759,210 அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அஞ்சல் வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட 759,210 விண்ணப்பங்களில் 738,050 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அண்மைய ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் 25,731 அஞ்சல் மூல வாக்குகள் இந்த தேர்தலில் அதிகரித்துள்ளதாக…

  • இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

    இஸ்ரேலில் வேலை தேடுபவர்களிடம் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பணமோசடி செய்யும் நடவடிக்கை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேற்று (21) பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் வேலை எதிர்ப்பார்த்துள்ளவர்களுக்கு பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது பணியகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பணம் செலுத்தியுள்ள இஸ்ரேலில் தொழில் எதிர்ப்பார்த்துள்ளவர்கள் எவரும் மீண்டும் பணம் செலுத்தத் தேவையில்லை என சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப்…

  • வெளிநாட்டு கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்

    பல மாதங்களாக நீடித்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நேற்று (21) முதல் புதிய கடவுச்சீட்டுகளை வழங்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய கடவுச்சீட்டின் நிறம் மாற்றப்பட்டு நீல நிறத்தில் உள்ளது. மேலும் பழைய கடவுச்சீட்டில் 64 பக்கங்களும், புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்களும் உள்ளன. முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்தநிலையில் புதிய கடவுச்சீட்டில் P எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய கடவுச்சீட்டின் அனைத்து பக்கங்களிலும் அழகான புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…

  • சிலாபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வௌியான தகவல்

    சிலாபம், சிங்கபுர பகுதியில் இரண்டு மாடி வீட்டில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மரணங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (21) நடைபெற்றது. இறந்த பெண்ணையும், அவரது மகளையும் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, பின்னர் உடல்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டமை தெரியவந்தது. சிலாபம் பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி ஐ.எம். இளங்கரத்ன பண்டா இன்று (21) பிற்பகல் சிலாபம் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த பெண் மற்றும் மகளின் சடலங்களின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.…

  • உகண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை கொண்டு வர மறந்த அநுர! நினைவூட்டும் கம்மன்பில

    ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தான் தற்போது கோமா நிலையில் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி கோமா நிலையில் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டில் இருந்து ஊழல்வாதிகள் கொள்ளையடித்து உகண்டாவில் மறைத்து வைத்திருக்கும் பணத்தை கொண்டு வருவேன், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வேன், சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களை திருத்துவேன் என தேர்தல் மேடையில் ஜனாதிபதி அநுரகுமார கூறியிருந்தார். ஆனால்…

  • கனடாவில் இந்த வாகனங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

    கனடாவில் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் ஹைபிரிட் ரக வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஹைபிரிட் ரக வாகனங்கள் சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹொண்டா நிறுவனத்திற்கு சொந்தமான ஹைபிரிட்டாக வாகனங்கள் குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 61000 ஹோண்டா ஹைபிரிட் ரக வாகனங்கள் இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ளது உயர் அழுத்தம் காரணமாக எரிபொருள் தாங்கியில் ஏற்பட்ட கோளாரினால் எரிபொருள் கசிவடைந்து தீ பற்றி சொல்லக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால்…

  • நிதிநெருக்கடியை ஏற்பட்டுத்த திட்டம்; ஹெஸ்புல்லா வங்கிகளை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்!

    லெபனான் தலைநகரில் ஹெஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தும் வங்கிககளை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. பெய்ரூட்டின் தெற்குபுறநகர் பகுதிகளில் உள்ள அல் ஹார்ட் அல் ஹசன் வங்கியின் கிளைகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது . பெய்ரூட்டின் சர்வதேச விமானநிலையத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளைகளையும் இஸ்ரேல் தாக்கியுள்ளது. விமானநிலையத்தி;ற்கு அருகில் உள்ள கட்டிடமொன்றை இஸ்ரேலின் விமானங்கள் தாக்குவதையும் அந்த கட்டிடம் இடிந்து விழுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. பெய்ரூட்டின் தென்பகுதியில் பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அல் ஹார்ட் அல்…

  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! மறைக்கப்பட்ட அறிக்கையை அம்பலப்படுத்திய கம்மன்பில

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும், பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பிலும், அப்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு 2019 ஜனவரி மாதம் முதல் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி வரை 13 புலனாய்வு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகைளை வெளியிடும் இன்றைய விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,…

  • விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிக்க விசேட சலுகை – போக்குவரத்து வசதி பெறுவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

    எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் விசேட தேவையுடையவர்களுக்கு வாக்குச்சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதிகளைப் பெற உள்ளூராட்சித் தேர்தல் அதிகாரியின் அனுமதியைப் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான விண்ணப்பம் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகம் அல்லது http://www.election.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். என் குறிப்பிடப்பட்டுள்ளது