Author: Yalarasan
-
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து தற்போது அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
-
யாழ். அரசாங்க அதிபருடன் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சந்திப்பு
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனை இன்று (08) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் தற்போதைய வேட்புமனு கையேற்றல் தொடர்பாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளார் எஸ். அச்சுதன் கலந்து கொண்டார்.
-
கனடிய விமான பயணிகளுக்கு நற்செய்தி
கனடிய விமான பயணிகளுக்கு சார்பான வகையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விமான பயணங்கள் தாமதமாவது மற்றும் பயண பொதிகள் சேதமடைதல் ஆகியன தொடர்பில் பயணிகள் தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு சாதக தீர்ப்பு வழங்கியுள்ளது. சில விமான சேவை நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தாக்கல் செய்த மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளு கனடிய விமான பயணிகளுக்கு சார்பான வகையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விமான பயணங்கள் தாமதமாவது…
-
நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் களமிறங்கும் இ.தொ.கா
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் மற்றும் தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் கடந்த செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்று, 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவாகியிருந்தார். இதன்பின்னர், ஜனாதிபதி தனது அரசியல் அமைப்பின் அதிகாரத்திற்கு அமைவாக கடந்த…
-
ராஜபக்சக்களின் ஊழல்! அடுத்தக் கட்ட நடவடிக்கையை ஆரம்பித்த அநுர அரசு
கடந்த கால அரசாங்கங்களின் போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்சக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன இது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்பட வேண்டும். விசாரணைகளின்…
-
யாழ். நோக்கி சென்ற பயணிகள் பேருந்துகள் மீது தாக்குதல்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில், அதன் சாரதி காயமடைந்துள்ளார். வெவ்வேறு பகுதிகளில் வைத்து மூன்று பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து யாழ் சென்ற தனியார் அதிசொகுசு பேருந்து மீதும், பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து மீது கிளிநொச்சியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பதுளை – யாழ்ப்பாணம்…
-
நான் மதுபானசாலை அனுமதி பெறவில்லை ரெலோ தலைவர் தெரிவிப்பு
நான் மதுபானசாலை அனுமதி பெறவில்லை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு அண்மைக்காலமாக ஜே வி பி அரசாங்கம் வந்தபின்பு ஊழல் சம்பந்தமாக நாடாளுமன்ற உறப்பினர்கள் சம்பந்தமாக பல கேள்விகள் கேட்கப்பட்டுவருகிறது என்னைப் பொறுத்தமட்டில் தேசியத்தை தொடர்ச்சியாக நேசிக்கின்றவன் என்றவகையிலே நான் ஒரு எங்களுடைய தமிழீழ விடுதலை இயக்கம் போராடத்திலே இனப்பிரச்சிணை மக்களுடை பிரச்சிணையை தீர்ப்பதற்க்காக ஆயதம் ஏந்தி போராடியவர்கள் அந்தவகையிலே இப்பொழுது பொதுவாக சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்களால் இந்த பார் போர்மீற் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது…
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகும் மாவை..!
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதற்கு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவில்லை என மாவை சேனாதிராஜா முடிவெடுத்திருந்த, நிலையிலேயே கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலக திட்டமிட்டுள்ளதாக அவரது மகன் கலை அமுதன் குறிப்பிட்டுள்ளார். எனினும் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில்…
-
ஐ.எஸ். குழு பிடித்த பெண் காசாவில் மீட்கப்பட்டார்
ஈராக்கில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) குழுவால் 2014 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட யாசிதி பெண் ஒருவர் 21 வயதில் காசாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். ஈராக், இஸ்ரேல், ஜோர்தான் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட இரகசிய நடவடிக்கை மூலமே அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளார். ஈரான் மற்றும் சிரிய நிலப்பகுதிகளை ஐ.எஸ். குழு ஆக்கிரமித்தபோது அங்குள்ள சிறுபான்மை யாசிதி மக்கள் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டதோடு பலரும் கொல்லப்பட்டனர். அப்போது 11 வயது சிறுமியாக இருந்த இந்தப் பெண் ஐ.எஸ். குழுவால் பிடிக்கப்பட்டு…
-
கனடாவில் பயங்கர சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த பிரான்ஸை சேர்ந்த தாய் – மகள்!
கனடாவின் மொன்றியாலில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தில் தாய் ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸைச் சேர்ந்த பெண்ணும் அவரது ஏழு வயது மகளும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பில் மொன்றியால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 43 வயதான லெனோர் கிராயாடி மற்றும் பரன் டிரைன் கிராயாடி ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த தீ விபத்து சம்பவம்…