இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் குறித்த தாக்குதலைத் தடுக்க இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அறிவிப்பு வரும் வரை குடிமக்கள் தங்குமிடங்களுக்குள் நுழைந்து அங்கேயே இருக்குமாறும் இஸ்ரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறிது நேரத்திற்கு முன்னர், ஈரானிய அரச ஊடகம் மீது இஸ்ரேல் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.
ஈரான் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ஹைஃபா பகுதியிலும் வடக்கு இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Leave a Reply