Category: உலக செய்திகள்
-
பூமியின் சுழற்சியில் மாற்றமாம் விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்
பூமியின் மையமானது எதிர்புறமாக சுற்றத்தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் திகதி வெளியான ஆய்வு இதழின் கட்டுரை ஒன்றிலேயே இது உறுதி செய்யப்பட்டுள்ளது Crust, mantle, வெளிப்புற மையம் மற்றும் உள்புற மையம் ஆகிய 4 அடுக்குகளாக பூமி அமைத்துள்ளது. உலகம் அதன் சுழற்றிச் பாதையில் சுற்றும் வேலையில் பூமியின் மையத்தில் உள்ள திடமான மெட்டல் மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆன INNER CORE என அழைக்கப்படும் பந்து போன்ற அமைப்பு தனிச்சையாக சுற்றி…
-
உக்ரைன் அதிரடி… ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை பிரகடனம்!
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவில் உள்ள பல பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் உள்ள வோரோனேஜ் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன, மேலும் தாக்குதல்களில் ஒன்று இராணுவ உபகரணக் கிடங்கில் தீயை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரஷ்யாவில் அபாயப் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிகமாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத்…
-
சுவிற்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கைகளை கட்டுப்படுத்த புதிய திட்டமிடல்
சுவிற்சர்லாந்தில் அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக, சுவிஸ் பெடரல் அரசு, மாகாணங்கள், சுவிஸ் நகரங்கள் மற்றும் நகராட்சிகள் இணைந்து புதிய புகலிட யுக்தி ஒன்றை உருவாக்கி வருதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் (SEM), புகலிடப் பகுதியில் தகவல் தொடர்பு, அகதிகளை அவர்களுடைய சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புதல் மற்றும் சுவிஸ் புகலிட அமைப்பை வலிமையாக்குதல் ஆகியவை இந்த புதிய புகலிட யுக்தியில் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.…
-
பிரித்தானியாவில் 11 பெண்கள் அடங்களாக 25 பேர் கொண்ட அமைச்சரவை!
பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழில் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் பிரித்தானியாவில் 11 பெண்கள் அடங்களாக 25 பேர் கொண்ட அமைச்சரவை நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழில் கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியப் பாரம்பரிய முறைக்கு அமைய மன்னர் சாள்ஸ்ஸை சந்தித்து தமது வெற்றியினை அறிவித்தார். பெக்கிங்ஹாம் மாளிகையில் மன்னரைச் சந்தித்து விட்டு கெய்ர் ஸ்டார்மர் நேரடியாகப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான இலக்கம் 10 டௌனிங் வீதிக்குச் சென்று…
-
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிட்னர்
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் இன்றையதினம் (04-07-2024) விறுவிறுப்பாக நடைபெறுகிறது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை 8 தமிழர்கள் களம் காண்கின்றனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளில்…
-
பிரிட்டனில் இன்று தேர்தல்; அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி? உலக நாடுகள் ஆவல்!
இன்று பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. பிரிட்டனின் தற்போதைய பிரதமராக ரிஷி சுனக் இருந்து வருகின்றார். இவருடைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடியவுள்ளது. பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சியே போட்டிப்போடும். கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியே பிரிட்டனை ஆண்டு வருகிறது. ஒரு காலத்தில் தன் செல்வாக்கினால், உலகையே கைக்குள் போட நினைத்த பிரிட்டன்,…
-
காஸாவில் அச்சமடையும் பொது மக்கள் ; குழந்தைகளிடையே பரவும் தோல் நோய்
காஸாவில் குழந்தைகளிடையே பரவும் ஆபத்தான தோல் நோய்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இஸ்ரேலின் குண்டு மழையிலும் விமானத் தாக்குதலிலும் அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்தவர்கள், கண்ணுக்குப் புலப்படாத உயிர்க்கொல்லி நோய்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். போதுமான உணவு இல்லை. தூய்மையான தண்ணீர் இல்லை. தங்குமிடம் இல்லை. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் சோர்வடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களிலும் கைவிடப்பட்ட கட்டடங்களிலும் பள்ளிக் கூடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். ஏராளமானோர் திறந்தவெளியில் படுத்துறங்குகின்றனர். கழிவறை, தண்ணீர், குளியல் அறை இல்லாமல்…
-
இந்தியாவில் மத நிகழ்வு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 121 பேர்! ரஷ்ய அதிபர் இரங்கல்
உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர். ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…
-
எலான் மஸ்க்கின் தவறை சீன சிறுமிசுட்டிக்காட்டியுள்ளார்
சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான் விரும்பியதை படமாக வரைந்துள்ளார். அப்போது திடீர் திடீரென வரைந்த படங்கள் காணாமல் போகிறது. இதனால் அந்த சிறுமி கவலை அடைந்தார். அத்துடன் இதை டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார். தன்னுடைய செயலை ஒரு வீடியோவை எடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு எலாஸ் மஸ்க் டேச் செய்துள்ளார். அதில் ஹலோ மிஸ்டர் மஸ்க், நான் சீனாவின் மோலியில்…
-
அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் வருவதற்கான வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்
தற்போது அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் , அமெரிக்க அதிபராக மாற்றுவதற்கன வாய்ப்புக்கள் உள்ளதாக கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களம் காண்கின்றனர். எனினும் , பைடனின் உலநிலை மற்றும் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில் , பைடன் அதிபர்…