ஊர் மாறி பிறந்தாலும், பேர் மாறி வளர்ந்தாலும், உள்ளுக்குள் இருக்கும் உணர்வு, அவன் உதிரத்தில் கலந்தது தமிழின துடிப்பு,
வேடன் அம்மா, அப்பா, அன்பு, அறிவு, அழகு, அரசியல், அஞ்சாமை….
மலையாளத்து ராப்பர் வேடன் அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஊர் மாறி பிறந்தாலும், பேர் மாறி வளர்ந்தாலும்,
உள்ளுக்குள் இருக்கும் உணர்வு, அவன் உதிரத்தில் கலந்தது தமிழின துடிப்பு,
வெளியில் அவன் வேடன், உள்ளுக்குள் அவன் வேங்கை.
சாலையின் ஓரத்தில். சகதியில் புரண்டவன், சாதி மதங்களால் வேதனை சுமந்தவன்.
ஆதிக்க சமூகத்தால் அலைந்து திரிந்தவன்,
அன்னை மொழியை அடி நெஞ்சில் உணர்ந்தவன்.
வேடன் வேடன் என்று விரட்டியடிக்கப்பட்டவன்,
மக்கள் விரும்பும் ஒருவனாய் வளர்ந்து நிற்பவன்.
பாட்டில் வறியோரின் வலியை சொன்னவன்,
பல்லாயிரம் மக்களின் மனங்களை கவர்ந்வன்.
தாங்கிடா வலிகளை தனக்குள்ளே சேர்த்தவன்
வேங்கையின் வீரம்பெற்று வீதியுலா வருகின்றான்.
மலையாள ராப் பாடகர் வேடன் மீது என்ஐஏ விடம் புகார்!
6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான “வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ்” என்ற பாடலில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, வேடன் என்று பிரபலமாக அறியப்படும் ராப்பர் ஹிரந்தாஸ் முரளி மீது பாஜக தலைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கடந்த சில நாள்களாக கஞ்சா வழக்கில் கைதாகி வருகின்றனர்.
அந்த வரிசையில் சமீபத்தில் பிரபல ராப் பாடகரான வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளியும் கஞ்சா பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து புலி பல் டாலருக்காக வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைக்ககம் மற்றும் என்ஐஏவிடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நகராட்சி கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் என்பவர் புகார் அளித்துள்ளார்.
பாடகர் வேடன் கடந்த 2019ஆம் ஆண்டு பாடிய “குரலற்றவர்களின் குரல்” என்ற பாடலில் மத்திய அரசின் உச்சத்தில் இருப்பவர்களைப் பற்றி மறைமுகமாக விமர்சித்திருந்தார். புகாரில் இந்த பாடலை குறிப்பிட்டு, பிரதமரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் பிம்பத்தை அவமதிக்கும், ஆதாரமற்ற, அவமரியாதைக்குரிய மற்றும் புண்படுத்தும் கருத்துக்கள் பாடலில் இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சாதியின் அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தி வருவதாகவும், இவரது பின்னணி குறித்தும் விசாரணை செய்ய பாலக்காடு நகராட்சி கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் புகார் அளித்தார்.
எப்படித்தான் கூட்டிக்கழிச்சு பார்த்தாலும்….அண்மைக்கால செய்திகள் இனவாத சிங்களத்திற்கு நெஞ்சில் உதைப்பது போலவே இருக்கும்.
Leave a Reply